நபார்டு வங்கியில் வேலை.. மாதம் 89 ஆயிரம் வரை சம்பளம்! டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
சென்னை: மத்திய அரசுக்கு சொந்தமான நபார்டு வங்கியில் (NABARD BANK) வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 91 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.89 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு பார்க்கலாம்.
மத்திய அரசுக்கு சொந்தமான வங்கி நபார்டு (NABARD). தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கியான நபார்டு நாடு முழுவதும் உள்ளது. ஊரக பகுதிகளில் விவசாய மேம்பாட்டுக்கு கடன் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை நபார்டு வங்கி மேற்கொண்டு வருகிறது.

பணியிடங்கள் விவரம்:
மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இந்த வங்கி செயல்படுகிறது. நபார்டு வங்கியில் காலியாக உள்ள 91 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வி தகுதி என்ன என்பதைக் காணலாம்.
உதவி மேலாளர் (Grade A) நிலையிலான பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
பொது - 48, CA - 04, கம்பெனி செக்ரட்டரி - 02, நிதி - 05, கம்ப்யூட்டர் டெக்னாலஜி - 10, எகனாமிஸ்ட் - 02, லீகல் - 02 என மொத்தம் 91 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வி தகுதி:
* மேற்கூறிய பணியிடங்களுக்கு கல்வி தகுதி பணியின் தன்மையைப் பொறுத்து மாறுபடும்.
* பொது (உதவி மேலாளர்) பணியிடத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்; 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி அவசியம்.
* MBA / PGDM / முதுகலை பட்டம் பெற்றிருந்தால் 55% மதிப்பெண்கள் போதுமானது.
* சிவில் இன்ஜினியரிங் பணிக்கு துறை சார்ந்த பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
* எகனாமிஸ்ட் பணிக்கு பொருளியல் பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
* விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி குறித்த முழு விவரங்களை தேர்வு அறிவிப்பில் பார்த்து உறுதி செய்து கொள்ளலாம்.
சம்பளம் எவ்வளவு:
சம்பளத்தை பொறுத்தவரை தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ. 44,500 முதல் ரூ. 89,150 வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ரூ.800 கட்டணமாக செலுத்த வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினர் ரூ.150 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கும் ரூ.150 கட்டணம்.
விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 08.11.2025 ஆகும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.11.2025 ஆகும்.
தேர்வு அறிவிப்பை படிக்க:
https://www.nabard.org/careers-notices1.aspx?cid=693&id=26
-
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
மத்திய அரசு வேலை.. 243 பணியிடங்கள்.. 1.77 லட்சம் சம்பளம்! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும்












Click it and Unblock the Notifications