நபார்டு வங்கியில் வேலை.. மாதம் 89 ஆயிரம் வரை சம்பளம்! டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசுக்கு சொந்தமான நபார்டு வங்கியில் (NABARD BANK) வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 91 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.89 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு பார்க்கலாம்.

மத்திய அரசுக்கு சொந்தமான வங்கி நபார்டு (NABARD). தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கியான நபார்டு நாடு முழுவதும் உள்ளது. ஊரக பகுதிகளில் விவசாய மேம்பாட்டுக்கு கடன் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை நபார்டு வங்கி மேற்கொண்டு வருகிறது.

job chennai employment

பணியிடங்கள் விவரம்:

மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இந்த வங்கி செயல்படுகிறது. நபார்டு வங்கியில் காலியாக உள்ள 91 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வி தகுதி என்ன என்பதைக் காணலாம்.

உதவி மேலாளர் (Grade A) நிலையிலான பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
பொது - 48, CA - 04, கம்பெனி செக்ரட்டரி - 02, நிதி - 05, கம்ப்யூட்டர் டெக்னாலஜி - 10, எகனாமிஸ்ட் - 02, லீகல் - 02 என மொத்தம் 91 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

* மேற்கூறிய பணியிடங்களுக்கு கல்வி தகுதி பணியின் தன்மையைப் பொறுத்து மாறுபடும்.
* பொது (உதவி மேலாளர்) பணியிடத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்; 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி அவசியம்.
* MBA / PGDM / முதுகலை பட்டம் பெற்றிருந்தால் 55% மதிப்பெண்கள் போதுமானது.

* சிவில் இன்ஜினியரிங் பணிக்கு துறை சார்ந்த பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
* எகனாமிஸ்ட் பணிக்கு பொருளியல் பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
* விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி குறித்த முழு விவரங்களை தேர்வு அறிவிப்பில் பார்த்து உறுதி செய்து கொள்ளலாம்.

சம்பளம் எவ்வளவு:

சம்பளத்தை பொறுத்தவரை தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ. 44,500 முதல் ரூ. 89,150 வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ரூ.800 கட்டணமாக செலுத்த வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினர் ரூ.150 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கும் ரூ.150 கட்டணம்.

விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 08.11.2025 ஆகும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.11.2025 ஆகும்.

தேர்வு அறிவிப்பை படிக்க:
https://www.nabard.org/careers-notices1.aspx?cid=693&id=26

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+