டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு! 2327 காலிப்பணியிடங்கள்! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
சென்னை: செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி குரூப் 2 , குரூப் 2ஏ தேர்வுகள் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இந்த தேர்வுகளுக்கு இன்று முதல் ஜூலை 19ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு தேர்வாணையம் சார்பில் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்களை நியமிக்க போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகிறது. அதன்படி டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2, குரூப் 4 ஆகிய டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான தேதி கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது.

அதில் 90 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வு ஜூலை 13 ஆம் தேதி நடைபெறுகிறது. 29 பணியிடங்களுக்கான குரூப் 1பி, குரூப் 1 சி ஆகிய தேர்வுகள் ஜூலை 12 ஆம் தேதி நடைபெறும். 2,030 காலி பணியிடங்களுக்கான குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வு வரும் செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறுகிறது.
டிப்ளமோ, ஐடிஐ அளவில் 730 பணியிடங்களுக்கான தொழில்நுட்பப்பிரிவு தேர்வுகள் வரும் நவம்பர் 17ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குரூப்-2 மற்றும் குரூப்2ஏ தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை மாற்றியுள்ளதாகத் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இந்நிலையில் குரூப் 2, குரூப் 2ஏ பிரிவில் காலிப்பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில்:
"விண்ணப்பதாரர்கள் இன்று (20-06-24) தொடங்கி அடுத்த மாதம் 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் கட்டணம் செலுத்துவதற்கும் 19ம் தேதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு வரும் செப்டம்பர் 14ம் தேதி நடைபெறும். கூடுதல் விவரங்களை அறிய https://www/tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் 2 பதவிகள்:
*உதவி ஆய்வாளர்
*துணை வணிகவரி அலுவலர்
*இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர்
*நன்னடத்தை அலுவலர்
*சார்பதிவாளர் நிலை II
*சிறப்பு உதவியாளர்
*தனி பிரிவு உதவியாளர்
*உதவிப் பிரிவு அலுவலர்
*வனவர்
என மொத்தம் 507 குரூப் 2 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது
குரூப் 2ஏ பதவிகள்:
*தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனரின் நேர்முக உதவியாளர்
*முழு நேர விடுதிக்காப்பாளர்
*முதுநிலை ஆய்வாளர்
*தணிக்கை ஆய்வாளர்
*உதவி ஆய்வாளர்
*கைத்தறி ஆய்வாளர்
*மேற்பார்வையாளர் அல்லது இளநிலை கண்காணிப்பாளர்
*உதவியாளர்
*வருவாய் உதவியாளர்
*செயல் அலுவலர் நிலை II
*இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் தணிக்கை ஆய்வாளர்
*நேர்முக எழுத கணக்கர்
*இளநிலை கணக்கர்
*விரிவாக்க அலுவலர்
*கீழ்நிலை செயலிடை எழுத்தர்
என மொத்தம் 1820 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications