பொதுத்துறை வங்கியில் வேலை! விண்ணப்பிக்க மறந்தவர்களுக்கு மீண்டும் சான்ஸ்! தமிழ் தெரிந்தால் முன்னுரிமை
சென்னை: நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. லோக்கல் பேங்க் ஆஃபிசர் எனப்படும் உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். இது தொடர்பான விவரங்களை இங்கு பார்க்கலாம்.
நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் ஒன்று பஞ்சாப் நேஷனல் வங்கி. டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த வங்கிக்கு இந்தியா மட்டும் இன்றி லண்டன், ஹாங்காங், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் கிளைகள் உள்ளன.

10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளைகளுடன் இயங்கி வரும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் லோக்கல் பேங்க் ஆஃபிசர் எனப்படும் உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்;
பொதுப்பிரிவு: 336
ஒபிசி 194
EWS: 67
எஸ்சி: 104
எஸ்டி : 49
என மொத்தம் 750 காலிப்பணியிடங்கள் உள்ளன. மாநில வாரியாக பார்த்தால் 17 மாநிலங்களில் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா (135), குஜராத் (95), தெலுங்கானா (88), அசாம் (86), கர்நாடகா (85) மற்றும் தமிழ்நாடு (85) ஆகிய மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான காலியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்று இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழித்திறன் அவசியம். தமிழகத்தில் உள்ள பணியிடங்கள் என்றால் தமிழ் தெரிந்து இருக்க வேண்டும். 10 வகுப்பில் தமிழை ஒரு பாடமாக படித்தவர்களுக்கு மொழித்திறன் தேர்வு வைக்கப்படாது. இல்லையென்றால் தனியாக மொழித்திறன் தேர்வு எழுத வேண்டியது அவசியம்.
வயது வரம்பு:
ஜூலை 1 ஆம் தேதிப்படி 20 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். அதாவது ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
தேர்வு முறை:
நான்கு கட்ட தேர்வு முறைகள் பின்பற்றப்படும். ஆன்லைன் எழுத்து தேர்வு நடைபெறும். இதில், ரீசனிங், பொது அறிவு, கம்ப்யூட்டர் அப்ட்டியூட் உள்ளிட்ட கேள்விகள் இடம் பெறும். 150 மதிப்பெண்களுக்கு இந்த தேர்வு நடைபெறும். பிரிவு வாரியாக நேரம் ஒதுக்கப்படும். நெகட்டிவ் மதிப்பெண்களும் உண்டு. இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும்.
50 மதிப்பெண்களில் குறைந்தபட்சம் 25 மதிப்பெண்கள் எடுப்பது அவசியம். எஸ்சி /எஸ்டி பிரிவினர் 22.5 மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும். எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு, உள்ளூர்மொழித்திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் இறுதி கட்ட மெரிட் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் டிசம்பர் 1 ஆம் தேதி கடைசி நாள். ஆன்லைன் தேர்வு டிசம்பர்/ ஜனவரியில் நடைபெரும்.. விண்ணப்ப கட்டணமாக ரூ.1,180 செலுத்த வேண்டும்.
எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு ரூ.59 ஆகும். தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பினை படித்து உறுதி செய்து கொள்ளவும்.
-
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications