Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"தபால் துறையில் வேலை".. தேர்வு கிடையாது + 10ம் வகுப்பு போதும்..சென்னையில் ஜுலை 30ல் இன்டர்வியூ..

Subscribe to Oneindia Tamil

சென்னை: தபால் துறையில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 10ம் வகுப்பு முடித்திருந்தால் போதும். எழுத்து தேர்வு இன்றி நிரப்படும் இந்த பணிக்கான நேர்க்காணல் என்பது ஜுலை 30ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் நேரடியாக நேர்க்காணலில் பங்கேற்று பணியை பெறலாம்.

மத்திய தகவல் மற்றும் தொலைதொடர்பு துறை அமைச்சகத்தின் கீழ் தபால் துறை இயங்கி வருகிறது. தபால் துறை சார்பில் தற்போது பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதில் ஒன்று தான் அஞ்சலக ஆயுள் காப்பீடு (Postal Life Insurance) திட்டமாகும்.

job jobs post office


இந்நிலையில் தான் அஞ்சலக ஆயுள் காப்பீடு பிரிவுக்கு ஆட்கள் தேர்வு செய்யபப்ட உள்ளனர். இதுதொடர்பான அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:

தற்போதைய அறிவிப்பின்படி அஞ்சலக ஆயுள் காப்பீடு விற்பனைக்கான ஏஜென்ட் (Agents to sale of postal life insurance) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு 10ம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வோரின் குறைந்தபட்ச வயது என்பது 18 ஆக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது என்பது 50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதுத.

இந்த பணிக்கு ஆண், பெண் என இருதரப்பினரும் விண்ணப்பம் செய்யலாம். வேலையில்லாத இளைஞர்கள், படித்த இளைஞர்கள், இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்கள், முன்னாள் படை வீரர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், மகளிர் சுயஉதவி குழுவினர், மகளிர் மண்டல பணியாளர்கள், ஊராட்சி தலைவர், ஊராட்சி மன்ற .றுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் நேர்க்காணலில் பங்கேற்கலாம். ஆனால் முக்கியமான ஒன்று உள்ளது. அது என்னவென்றால் நேர்க்காணலுக்கு செல்வோர் பிற காப்பீட்டு நிறுவனங்களின் ஏஜென்ட்டாக இருக்க கூடாது.

இந்த பணியை பெற விரும்புவோர் நேரடியாக நேர்க்காணலில் பங்கேற்கலாம். நேர்க்காணல் என்பது ஜுலை 30ம் தேதி காலை 11 மணிக்கு சென்னை தாம்பரத்தில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் நடைபெற உள்ளது. அதாவது Office of Senior Superintendent of Post offices, Tambaram Division, Chennai 600 045 என்ற முகவரியில் உள்ள சென்னை தாம்பரம் தலைமை தபால் நிலையத்தின் முதல் தளத்தில் நேர்க்காணல் என்பது நடைபெற உள்ளது.

இந்த பணி என்பது அரசு வேலையல்ல. முழுவதும் கமிஷன் அடிப்படையிலான பணியாகும். விருப்பம் உள்ளவர்கள் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, பார்ன், ஆதார் கார்டு மற்றும் கல்வி சான்றிதழ்களுடன் நேர்க்காணலில் ஜுலை 30ம் தேதி நடக்கும் நேர்க்காணலில் பங்கேற்கலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் தேசிய சேமிப்ப சான்று/ஜனாதிபதி பெயரில் உறுதியளிக்கப்பட்ட கிசான் விகாஸ் பத்திர வடிவில் ரூ.5000 காப்பீட்டு தொகையாகவும், தற்காலிக உரிம கட்டணமாக ரூ.50ம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த பணிக்கு பயணப்படி எதுவும் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+