Bank Job: பஞ்சாப் & சிந்த் வங்கியில் மேனேஜர் வேலை.. டிகிரி முடித்தவர்களுக்கு செம சான்ஸ்! விட்றாதீங்க
சென்னை: பஞ்சாப் & சிந்த் வங்கியில் ரிலேஷன்ஷிப் மேனேஜர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிகிரி + அனுபவம் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். காலிப்பணியிடங்கள், கல்வித் தகுதி போன்ற விவரங்களை விரிவாக பார்க்கலாம்.
நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் ஒன்று பஞ்சாப் & சிந்த் வங்கி. டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. சுமார் 1,800 கிளைகளுடனும் 25 மண்டல அலுவலகங்களுடன் இயங்கி வரும் மிகப்பெரிய வங்கியாக பஞ்சாப் சிந்த் வங்கி உள்ளது.

பணியிடங்கள் விவரம்:
* தற்போது இந்த வங்கியில் காலியாக உள்ள 30 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
* MSME ரிலேஷன்ஷிப் மேனேஜர்: 30 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
கல்வித் தகுதி:
* இந்த பணியிடங்களுக்கு அங்கீகரிக்கபப்ட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். எம்பிஏ (மார்க்கெட்டிங் அல்லது நிதி) முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
* கஸ்டமர் ரிலேஷன்ஷிப் / கிரெடிட் மேனேஜ்மெண்ட் பிரிவில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் அவசியம். ரிசர்வ் வங்கியால் அட்டவணையிடப்பட்ட வணிக வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
வயது வரம்பு:
* வயது வரம்பை பொறுத்தவரை 01.11.2025 தேதிப்படி குறைந்தபட்சம் 25 வயதும் அதிகபட்சம் 33 வயதுக்கும் இடையில் வருபவர்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது, 02.11.1992 க்கு பிறகோ, 01.11.2000- க்கு பிறகோ பிறந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
* அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
தேர்வு முறை:
* எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக்கட்டணமாக ரூ.800 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு 100 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
* தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை ஒருமுறை நன்கு படித்து உறுதி செய்த பிறகு விண்ணப்பிக்கலாம். https://punjabandsind.bank.in/ -என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
* விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கிய நாள்; 05.11.2025 ஆகும்.
* விண்ணப்பிக்க அவகாசம் முடியும் நாள்: 26.11.2025 ஆகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: Click Here
-
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்!












Click it and Unblock the Notifications