திருச்சியை சேர்ந்தவரா?.. வேலையில்லாமல் உள்ளீரா?.. ரூ 50 ஆயிரம் வரை சம்பளத்தில் நல்ல வேலை இருக்கு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் வேலைவாய்ப்புக்கான அறிவிக்கை தற்போது வெளியாகியுள்ளது.

இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது இரவு காவலர் மற்றும் அலுவலக உதவியாளர் ஆகிய இரண்டு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காகும். இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து, விண்ணப்பங்கள் தபால் மூலம் வரவேற்கப்படுகின்றன.

Recruitment for the post of Night Watchman in Rural Development

ஆகவே திருச்சி மாவட்டத்தில் உள்ள தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்த அரியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய நாள் ஜனவரி 13 ஆகும்.

மேற்கண்ட பணிகளுக்கு நேர்காணல் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த இரு காலிப்பணியிடங்களுக்கு ரூ 15,700 முதல் ரூ 50 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு tiruchirappalli.nic.in பாருங்கள்.

இரவுக் காவலர் பணிக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. அலுவலக உதவியாளர் பணிக்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு இருபதவிகளுக்கும் குறைந்தது 18 வயது முதல் அதிகபட்சமாக 35 ஆண்டுகள் வரை இருக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), மாவட்ட ஆட்சியரகம் (வளர்ச்சி பிரிவு), திருச்சி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+