மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. என்ஜினியரிங் முடிச்சிருக்கீங்களா.. அப்போ உங்களுக்குதான்.. செம சான்ஸ்
சென்னை: மத்திய அரசின் ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா (SAIL) பொதுத்துறை நிறுவனத்தில் காலியாக உள்ள 92 மேனேஜ்மண்ட் டிரெய்னி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் பொதுத்தூறை நிறுவனங்களில் ஒன்றான ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள மேனேஜ்மண்ட் டிரெய்னி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம் உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்: கெமிக்கல் என்ஜினியரிங் (03 பணியிடங்கள்), சிவில் என்ஜினியரிங் (03), எலக்ட்ரிக்கல் என்ஜிரியங்(03), இன்ஸ்ட்ருமெண்டல் என்ஜினியரிங் (26) , மெக்கானிக்கல் என் ஜினியரிங் (34), Metallurgy என் ஜினியரிங் (05), மைனிங் என் ஜினியரிங்( 14) என மொத்தம் 92 பணியிடங்கள் நிரப்பபடுகின்றன.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இருந்து என்ஜினியரிங் படிப்பு முடித்து இருக்க வேண்டும். 60 சதவீத மதிப்பெண்களுடன் துறை சார்ந்த பிரிவில் என் ஜினியரிங் படிப்பு முடித்து இருப்பது அவசியம். கல்வி தகுதி பற்றிய விரிவான விவரங்களை கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் தேர்வு அறிவிப்பில் பார்த்துக் கொள்ளலாம்.
வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை எஸ்.சி/ எஸ்.டி பிரிவினர் 33 வயது வரை விண்ணப்பிக்கலாம். ஒபிசி பிரிவினர் 31 வயது வரை விண்னப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு 10- ஆண்டுகள் வரை வயது வரம்பில் சலுகை உண்டு. துறையில் பணியற்றும் விண்ணப்பதாரர்களுக்கு 45 வயது வரை விண்ணபிக்க அனுமதி உண்டு.
தேர்வு முறை: தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ஆன்லைன் முறையில் தேர்வு நடைபெறும். அதில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு குரூப் டிஸ்கசன் நடைபெறும். பின்னர் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ஒரு ஆண்டுக்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி காலம் முடிந்த பிறகு ஒரு வருடம் தகுதிகான் காலம் (probation) காலம் ஆகும்.
சம்பளம் எவ்வளவு?: பயிற்சி காலத்தில் மாதம் ரூ.50 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும். மேனேஜ்மெண்ட் டிரெய்னி பணிக்கு சேர்ந்த பின்னர் 50,000-1,80,000- வரை சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வு நடைபெறும் இடங்கள்: ஜனவரி மாதத்தில் ஆன்லைன் தேர்வு நடைபெறும் என உத்தேசமாக கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் கணிணி வழி தேர்வு நடைபெறும். தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி சேலம், ஆகிய நகரங்களில் நடைபெறும்.
விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணமாக ஒபிசி பிரிவினர் ரூ.700 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி உள்ளிட்ட பிரிவினருக்கு ரூ.200 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 31.12.2023க்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு அறிவிப்பை படிக்க https://d1cmkr5tdoeyjk.cloudfront.net/sail/pdf/Detailed%20Advt.-SRD.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்யவும்.












Click it and Unblock the Notifications