ரயில்வேயில் வேலை வேணுமா? 32,438 பணியிடங்கள்.. விண்ணப்ப அவகாசம் தொடங்கிடுச்சு.. தூள் கிளப்புங்க
சென்னை: உதவியாளர், டிராக் மெயிண்டனர், மெக்கானிக்கல் அஸிஸ்டண்ட் என இந்தியன் ரயில்வேயில் ஆர்ஆர்பி குரூப் டி பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் நேற்று முதல் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் தொடங்கியது. 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது? என்பதை இங்கு பார்க்கலாம்.
அரசு வேலைக்காக இளைஞர்கள் பலரும் காத்திருந்து படித்து வருகின்றனர். இதிலும், ரயில்வேயில் வேலை பார்க்க வேண்டும் என்பது பல இளைஞர்களின் கனவாக இருக்கிறது. இதனால் ரயில்வேயில் இருந்து எப்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகும் காத்திருந்த நிலையில் கடந்த மாதம் ரயில்வேயின் ஆர் ஆர் பி குரூப் டி பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியானது.

ஆனால் எப்போது முதல் விண்ணப்பிக்கலாம் என்ற தகவலை ஆர் ஆர் பி வெளியிடாமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று முதல் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் தொடங்கியுள்ளது. 10 ஆம் வகுப்பு கல்வித் தகுதி தான். டிராபிக் பாயிண்ட்ஸ்மேன், டிராக் மெயிண்டனர், மெக்கானிக்கல் அஸிஸ்டண்ட் உள்பட நாடு முழுவதும் மொத்தம் 35,438 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
காலிப்பணியிடங்கள் விவரம்:
டிராபிக் பாயிண்ட்ஸ்மேன் பி - 5,058
அஸிஸ்டண்ட் (P-Way) - 247
மெக்கானிக்கல் அஸிஸ்டன்ட் (C&W) - 2,587
என்ஜினியரிங் அஸிஸ்டண்ட் (டிராக் மிஷின்) - 799
டிராக் மெயிண்டனர் (குரூப் - 4)- 13,187
அஸிஸ்டன்ட் லோகோ (எலக்ட்ரிக்கல்) - 950
அஸிஸ்டன்ட் ஆபரேஷன்ஸ் (எலக்ட்ரிக்கல்) - 744
அஸிஸ்டண்ட் லோகோ (Diesel) - 420
அஸிஸ்டண்ட் ஒர்க்-ஷாப் மெக்கானிக்கல்) - 3077
எலக்ட்ரிக்கல் அஸிஸ்டண்ட் டிஆர்டி - 1381
உள்பட மொத்தம் 32,438 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
கல்வித் தகுதி & சம்பளம்: விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப சம்பளமாக ரூ.18,200 வழங்கப்படும். அலவன்ஸ்சுடன் சேர்த்து மாதம் ரூ. 22,500 முதல் ரூ.25,380 வழங்கப்படும்.
வயது வரம்பு: 18 முதல் 30 வயது உடையவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு வயது உச்ச வரம்பு சலுகையின் படி 18 முதல் 36 வயதுடையவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
தேர்வு முறை: தேர்வானது ஆன்லைன் மூலமாக நடைபெறும். முதலில் கணினியில் கொள்குறி தேர்வு (சிபிடி), உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். ஆன்லைன் வழியாக இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும். நேற்று முதல் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கால அவகாசம் முடியும் நாள் பிப்ரவரி 22 ஆம் தேதி ஆகும்.
விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணம் 500 ஆகும். ஆன்லைன் மூலமாக விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். தேர்வு எழுதிய பின்னர் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.400 திருப்பி அளிக்கப்படும். பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.250 ஆகும். தேர்வு எழுதி பிறகு முழு தொகையும் திருப்பி அளிக்கப்படும்.












Click it and Unblock the Notifications