Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

SBI Bank Jobs: எஸ்பிஐ வங்கி வேலைவாய்ப்பு.. 6,589 கிளார்க் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாட்டின் பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் வேலைவாய்ப்பு (SBI Bank Jobs) அறிவிக்கப்பட்டு இருந்தது. மொத்தம் 6,589 கிளார்க் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளத்தை பொறுத்தவரை ரூ.64,480 வரை வழங்கப்படும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும்.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி எஸ்பிஐ ஆகும். எஸ்பிஐ வங்கியை தவிர்த்து இதர அனைத்து வங்கிகளுக்குமான பணியிடங்களை ஐபிபிஎஸ் எனப்படும் வங்கிப் பணியாளர் தேர்வு ஆணையம் நிரப்பி வருகிறது. அந்த வகையில் எஸ்பிஐ வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பினை கடந்த 5 ஆம் தேதி வெளியிட்டது. மொத்தம் 6,589 கிளார்க் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

SBI Bank Jobs job sbi bank job employment

பணியிடங்கள் விவரம்:

கை நிறைய சம்பளம், சலுகைகள், சமூகத்தில் கவுரவமான அந்தஸ்து, பணி பாதுகாப்பு இருப்பதால் வங்கிப் பணிகளில் எப்படியாவது சேர்ந்துவிட வேண்டும் என்று படித்து வந்தவர்களுக்கு இந்த அறிவிப்பு மிகப்பெரிய சான்ஸாக இருந்தது. பலரும் விண்ணப்பித்து வரும் நிலையில், இன்றே இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும். எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பித்து விடுங்கள்.

எஸ்பிஐ வங்கியில் நாடு முழுவதும் 6,589 கிளார்க் (ஜூனியர் அசோசியேட்) பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் 380 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. கர்நாடகாவில் 270, கேரளாவில் 247 என நாடு முழுக்க மொத்தம் 5,180 பணியிடங்கள் நிரப்ப படுகின்றன. ஏற்கனவே நிரப்பப் படாத backlog பணியிடங்களையும் சேர்த்து 6,589 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

சம்பளம் எவ்வளவு?

சம்பளத்தை பொறுத்தவரை தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும்.

கல்வித் தகுதி

ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். நடப்பு ஆண்டில் பட்டப்படிப்பு முடிப்பவர்களும் (டிசம்பர் 31. 2025 -க்குள்) விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழி தெரிந்து இருப்பது அவசியம் ஆகும்.

உதாரணத்திற்கு தமிழகத்தில் உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால், தமிழ் மொழி தெரிந்து இருப்பது அவசியம். 10, 12 ஆம் வகுப்பில் உள்ளூர் மொழியை ஒரு பாடமாக எடுத்து படிக்காத விண்ணப்பதாரர்கள், உள்ளூர் மொழித்திறன் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம் ஆகும்.

வயது வரம்பு:

வயது வரம்பை பொறுத்தவரை 20 முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். 2.04.1997 முதல் 1.04.2005 இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். அதாவது, ஓபிசி பிரிவினர் என்றால் 31 வயது வரை விண்ணப்பிக்க முடியும்.

இன்றே கடைசி நாள்

தேர்வு முறையை பொறுத்தவரை, முதல் நிலை தேர்வு, மெயின் தேர்வு என இரண்டு கட்ட தேர்வுகள் நடைபெறும். முதல் நிலை தேர்வானது செப்டம்பர் மாதத்தில் நடைபெறும். மெயின்ஸ் தேர்வு நவம்பர் மாதத்தில் நடைபெறும். இது தொடர்பான விவரங்கள் பின்னர் தெரியப்படுத்தபடும்.

ஆன்லைன் வழியாகவே மட்டும் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பக் கட்டணத்தை பொறுத்தவரை ரூ.750 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும்.

தேர்வு அறிவிப்பை படிக்க: https://sbi.co.in/documents/77530/52947104/JA+2025+-Detailed+Advt.pdf/8f7ff18f-1972-21c8-9212-5a8cf85a7099?t=1754398573326

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+