வந்தது அறிவிப்பு! எஸ்பிஐ வங்கியில் கிளர்க் வேலை.. 8,283 பணியிடங்கள்.. செம சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க
சென்னை: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் கிளர்க் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 8,283 பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்று ஸ்டேட் ஆப் இந்தியா. எஸ்.பி.ஐ தவிர்த்து பிற வங்கிகளுக்கான பணியிடங்களை ஐபிபிஎஸ் எனப்படும் வங்கிப்பணியாளர் தேர்வு ஆணையம் முலம் நிரப்பப்டுகிறது. ஆனால், ஸ்டேட் பாங் ஆப் இந்தியா எனப்படும் எஸ்.பி.ஐ தனியாக தேர்வு நடத்தி அவ்வப்போது காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறது.

அந்த வகையில், வங்கிப் பணிகளுக்கு தயாராகும் விண்ணப்பதாரர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டு இருந்த கிளர்க் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை எஸ்.பி.ஐ வெளியிட்டுள்ளது. இது பற்றிய முழு விவரங்களை பார்க்கலாம்.
காலிப்பணியிடங்கள்: ஜூனியர் அசோசியேட் ( வாடிக்கையாளர் உதவி &சேல்ஸ்) கிளர்க் கேடர் பதவிகள் - 8,283 பணியிடங்கள் நிரப்படுகின்றன. தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் இந்தியா முழுவதும் உள்ள எஸ்.பி.ஐ வங்கி கிளைகளில் பணியமர்த்தப்படுவார்கள்.
கல்வி தகுதி: அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இருந்து ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்பு இறுதி ஆண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். எனினும் 31.12.2023 க்கு முன்பாக பட்டப்படிப்பு முடித்தற்கான சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும்.
வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை 20 வயது நிரம்பியவர்களும் 28 வயதுக்கு மிகாதவர்களும் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. அதாவது ஒபிசி பிரிவினர் என்றால் 3 ஆண்டுகளும், எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் என்றால் 5 ஆண்டுகளும் தளர்வு உண்டு. இது குறித்த விவரங்களை தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
சம்பளம் எவ்வளவு? தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 17,900 - 47,920 வரை சம்பளமாக கிடைக்கும்.
விண்ணப்பிப்பது எப்படி? தகுதியும் ஆரவமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்னப்பிக்க வேண்டும். தேர்வு கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி உள்ளிட்ட பிரிவினருக்கு தேர்வுக் கட்டணம் கிடையாது. முதன்மை தேர்வு, மெயின் தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு நடைபெறும் இடங்கள்: நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு நடைபெறும். தமிழ்நாட்டை பொறுத்தவரை முதன்மை தேர்வுகள் சென்னை, கோவை, கடலூர், ஈரோடு, காஞ்சிபுரம், கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகர்கோவில், நாமக்கல், ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் ஆகிய இடங்களில் நடைபெறும்.
தேர்வு நடைபெறும் தேதி: முதன்மை தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி மாதமும், மெயின் தேர்வு பிப்ரவரி மாதமும் நடைபெறும். இந்த பணியிடங்களுக்கு இன்று (17.11.2023) முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் 07.12.2023 ஆகும். தேர்வு அறிவிப்பினை படிக்க https://sbi.co.in/documents/77530/36548767/161123-JA+2023-Detailed+Advt.pdf/926d28be-7df8-36f3-7113-344404668498?t=1700129762521 இங்கே கிளிக் செய்யவும்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications