அனுபவம் வேண்டாம்.. Backend Developer பிரிவில் காலியிடங்கள்.. Seekho நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
சென்னை: நம் நாட்டில் பிரபலமான செயலிகளில் ஒன்றான சிஹோ நிறுவனத்தில் இருந்து பேக்எண்ட் டெவலப்பர் (Backend Developer - SDE1) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு உடனடியாக விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதுதொடர்பான விவரம் வருமாறு:
Seekho என்பது எஜூடெயின்மென்ட் செயலியாகும். இந்த செயலியில் கல்வி மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த வீடியோக்கள் நிறைந்து உள்ளன.

தொழில் வளர்ச்சி, நிதி, வணிகம், தொழில்நுட்பம் உள்பட ஒவ்வொருவருன் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடைய பல வீடியோக்கள் இந்த செயலியில் உள்ளது.
இந்தி உள்பட பல பிராந்திய மொழிகளில் இந்த வீடியோக்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த Seekho செயலியின் தலைமை அலுவலகம் பெங்களூரில் அமைந்துள்ளது. இந்நிலையில் தான் சிஹோ நிறுவனத்தில் தற்போது பேக்எண்ட் டெவலப்பர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு 0-3 ஆண்டுக்குள் பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணி அனுபவம் கொண்டவர்கள் என்றால் அவர்கள் Building Scalable Backend Systems-ல் பணியாற்றி இருக்க வேண்டும். மேலும் எந்தவித பணி அனுபவமும் இல்லாதவர்களும் விண்ணப்பம்
செய்யலாம். அவர்களுக்கு சில முக்கிய தகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி டிசைன் ஸ்கேலபிள், மெயின்டெயினபிள் மற்றும் பெர்பாமண்ஸ் பேக்எண்ட் சிஸ்டம்ஸ் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் டேட்டா ஸ்ட்ரைக்சர்ஸ் மற்றும் அல்காரிதமஸ் (Data Structures and Algorithms)மற்றும் ஓஓபிஎஸ் பிரின்சிபிள் (OOPs Principles)பற்றிய புரிதல் இருக்க வேண்டும்.
Integration RESTful APIs மற்றும் ஸ்கேலில் பேக்எண்ட் சர்வீஸில் பணியாற்றி இருக்க வேண்டும். அதேபோல் டேட்டாபேசில எஸ்க்யூஎல், NoSQL பற்றி தெரிந்திருக்க வேண்டும். மேலும் Query Optimization, Indexing, data modeling தெரிந்திருக்க வேண்டும். டீபக் தெரிந்திருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருப்பதோடு, ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. அதேபோல் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி பற்றியும் தெரிவிக்கப்படவில்லை.
எனவே எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. இப்படி விண்ணப்பம் செய்வோருக்கு இண்டர்வியூ தேதி, நேரம், இண்டர்வியூ நடக்கும் இடம் உள்ளிட்டவை தெரிவிக்கப்படும். இண்டர்வியூவில் வெற்றி பெறுவோருக்கு பெங்களூரில் பணி நியமனம் செய்யப்படும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
IT JOBS: சென்னை - பெங்களூர் உள்பட 3 இடங்களில் ஐடி வேலை.. மார்ச் 14ல் TCS-யில் இண்டர்வியூ -
அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை.. தமிழக அரசு வெளியிட்ட குட்நியூஸ்.. அரசாணையை கவனித்தீர்களா? -
ஆரோவில் நிலம் 350 கோடி.. ஆளுநர் ஆர்.என்.ரவி, பெண் ஐஏஎஸ் அதிகாரி மீது பறந்த புகார்.. முழு விவரம் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
கடவுளே.. பும்ராவே.. வான்கடே மைதானத்தில் பிசிசிஐ சிலை வைக்கணும்.. தெறிக்கும் ரசிகர்களின் மீம்ஸ்!












Click it and Unblock the Notifications