வீட்டில் இருந்தே வேலை.. பிரபல நிறுவனம் தரும் சூப்பர் வாய்ப்பு.. மிஸ் பண்ணாதீங்க
சென்னை: பெங்களூரில் செயல்பட்டு வரும் Sprinto ஐடி நிறுவனத்தில் இன்டர்ன் (Intern) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தே பணியாற்றலாம்.
பெங்களூரில் ஸ்பிரிண்டோ (Sprinto) எனும் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் என்பது Cloud Setup உடன் automates Security compliance & works பணியை மேற்கொண்டு வுருகிறது. இந்த நிறுவனத்துக்கு 25க்கும் அதிகமான நாடுகளில் இருந்து மொத்தம் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

இந்நிலையில் தான் ஸ்பிரிண்டோ நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
தற்போதைய அறிவிப்பின்படி ஸ்பிரிண்டோ நிறுவனத்தில் இருந்து இன்டர்ன் (Intern) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு நல்ல கம்யூனிகேஷன் திறமை இருக்க வேண்டும். அதேபோல் ஆங்கிலத்தில் நன்றாக எழுத தெரிந்திருக்க வேண்டும். ஹார்ட்வொர்க்கிங், கமிட்டட் மற்றும் முழுநேர இன்டர்ன்ஷிப் பணிக்கு தயாராக இருக்க வேண்டும்.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூரில் உள்ள அலுவலகம் சென்று பணியாற்ற தேவையில்லை. 100 சதவீதம் வீட்டில் இருந்தே பணியாற்றலாம். இதனால் வீட்டு வாடகை, போக்குவரத்து செலவு உள்ளிட்டவை மிச்சமாகும். இதனால் தகுதி உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு Stipend முறையில் சம்பளம் வழங்கப்பட உள்ளது. அதன்படி மாதம் ரூ.22 ஆயிரம் Stipend முறையில் வழங்கப்படும். இதில் சிறப்பாக செயல்படுவோருக்கு பிற பணிக்கான Recommendation கடிதம் என்பது வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஸ்பிரிண்டோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதனால் முன்கூட்டியே விண்ணப்பம் செய்வது நல்லது.
பணி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications