மத்திய அரசு ஊழியராகனுமா? எஸ்எஸ்சி வெளியிட்ட அறிவிப்பு! 81 ஆயிரம் வரை சம்பளம்.. 10, +12 தகுதி தான்!
சென்னை: மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையமான எஸ்.எஸ்.சி சார்பில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். லோயர் டிவிஷன் கிளர்க், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் உள்ளிட்ட பதவிகளுக்கு மொத்தம் 3,131 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணியிடங்களுக்கு 81 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.
மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையமான எஸ்.எஸ்.சி 3,131 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 10, +12 வகுப்பு கல்வி தகுதி கொண்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்கள் குறிப்பாக மத்திய அரசு பணிகளில் சேர்ந்துவிட வேண்டும் என்ற கனவுடன் போட்டித்தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் எஸ்.எஸ்.சி வெளியிடும் தேர்வு அறிவிப்பை எதிர்பார்த்து இருப்பார்கள். அந்த வகையில் தேர்வர்கள் எதிர்பார்த்த தேர்வு அறிவிப்புகளில் ஒன்றை எஸ்.எஸ்.சி வெளியிட்டுள்ளது. இது பற்றி விரிவாக பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
லோயர் டிவிஷன் கிளர்க் (LDC),
ஜூனியர் செகரட்டரியேட் அசிஸ்ஸ்ட்ண்ட்
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் கிரேடு ஏ ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வித் தகுதி:
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணித பாடப்பிரிவு எடுத்து படித்து இருப்பது அவசியம். எல்.டிசி பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.
வயது வரம்பு:
18 வயது நிரம்பியவர்களும் 27 வயது பூர்த்தி அடையாதவர்களும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். அதாவது எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
சம்பளம் எவ்வளவு?
லோயர் டிவிஷன் கிளர்க் (LDC), ஜூனியர் செகரட்டரியேட் அசிஸ்ஸ்ட்ண்ட்- ரூ. 19,900 - 63,200/-
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்- ரூ. 29,200 - 92,300/-
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் கிரேடு ஏ - ரூ. 25,500 - 81,100/-
தேர்வு முறை:
கணிணி முறையில் இரண்டு கட்ட தேர்வுகள் நடைபெறும். அதன்பிறகு சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வுகள் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைபெறும். தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி மற்றும் வேலூர் ஆகிய நகரங்களில் நடைபெறும்.
விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி, பெண்கள் உள்ளிட்ட பிரிவினருக்கு தேர்வுக்கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்க வரும் 18.07.2025 கடைசி நாளாகும். தேர்வு நடைபெறும் நாள்: முதல் கட்ட தேர்வு 08.09.2025 to 18.09.2025, இரண்டாம் கட்ட தேர்வு: பிப்ரவரி - மார்ச் 2025-இல் நடைபெறும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Notice_of_adv_chsl_2025.pdf
-
IT JOBS: நாளை மதியம் சென்னையில் இண்டர்வியூ.. HCL-லில் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு.. செம சான்ஸ் -
IT JOBS: மார்ச் 14ல் பெங்களூரில் இண்டர்வியூ.. பணி சென்னையில் தான்.. HCL தரும் சூப்பர் சான்ஸ் -
இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு.. 67 ஆயிரம் வரை சம்பளம்! 10, 12 ஆம் வகுப்பு தகுதி தான் -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து?












Click it and Unblock the Notifications