Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

SSC Job: மத்திய அரசு வேலை.. 3,003 பணியிடங்கள்.. 10, 12 ஆம் வகுப்பு தகுதி தான்.. எஸ்எஸ்சி மெகா அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசின் ஸ்டாப் செலக்‌ஷன் கமிஷன் என அழைக்கப்படும் எஸ்.எஸ்.சியில் மொத்தம் 3003 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. சுருக்கெழுத்தாளர், ஸ்டோர் கிளர்க், துணை செவிலியர், இளநிலை மருந்தாளர் என பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 10, 12 ஆம் வகுப்பு மற்றும் டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். இது குறித்து மேலும் விரிவான விவரங்களை இங்கு காணலாம்.

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை எஸ்.எஸ்.சி எனப்படும் ஸ்டாப் செலக்‌ஷன் பணி மேற்கொண்டு வருகிறது. காலியிடங்களுக்கு ஏற்ப உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு இந்த பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகும். தேர்வுகள் நடத்தப்பட்டு இதற்கான ஆட்சேர்ப்பு நடைபெறுவது வழக்கம்.

SSC Job

எஸ்.எஸ்.சி அறிவிப்பு

மத்திய அரசு பணி என்பதால், வேலை தேடும் பல லட்சக்கணக்கான இளைஞர்கள், எஸ்.எஸ்.சி வெளியிடும் அறிவிப்பை ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருப்பார்கள். இந்த நிலையில்தான் மெகா அறிவிப்பு ஒன்றை எஸ்.எஸ்.சி வெளியிட்டுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

* சுருக்கெழுத்தாளர் தரம் - II
* ஸ்டோர் கிளர்க்,
* மல்டி டாஸ்கிங் ஸ்டாப்
* பெர்சனல் அசிஸ்டண்ட்,
* பப்ளிக் ஹெல்த் நர்சிங் ஆஃபிசர்

* பொது சுகாதார செவிலியர் அதிகாரி
* மருத்துவ சமூக நல அதிகாரி
* துணை செவிலியர்
* இஜிசி தொழில்நுட்ப வல்லுநர் (இளநிலை)
* எக்ஸ்-ரே தொழில்நுட்ப வல்லுநர்
* சுகாதாரப் பணியாளர் (பெண்)
* இளநிலை மருந்தாளர்
* பணிமனை உதவியாளர்

என 87 வகையான பிரிவுகளில் மொத்தம் 3003 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

கல்வித் தகுதி:

இந்த பணியிடங்களுக்கான கல்வித் தகுதி பணியின் தன்மைக்கேற்ப மாறுபடும். 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, டிகிரி (துறைசார்ந்த பிரிவில்) உள்ளிட்ட படிப்புகள் முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

வயது வரம்பு:

பணியிடங்களுக்கு ஏற்ப வயது வரம்பு மாறுபடும். அதிகபட்சமாக 35 வயது வரை உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வுகள் உண்டு.

தேர்வு முறை:

கணினி வழியிலான தேர்வு, திறன் தேர்வு, டைப்பிங் டெஸ்ட், டேட்டா எண்ட்ரி தேர்வு ஆகியவை நடைபெறும்.

கணினி வழி தேர்வில் மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும். இவை பொது அறிவுத்திறன் (25 கேள்விகள்), பொது விழிப்புணர்வு (25 கேள்விகள்), அளவுசார் திறன் (25 கேள்விகள்) மற்றும் ஆங்கில மொழி (25 கேள்விகள்) ஆகிய பிரிவுகளில் கேள்விகள் இடம் பெற்று இருக்கும். ஒவ்வொரு தவறான விடைக்கும் 0.50 மதிப்பெண்கள் நெகட்டிவ் மதிப்பெண்ணாகக் கழிக்கப்படும்.

தேர்வு மையங்கள்:

நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் அமைக்கப்படும். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், புதுவை ஆகிய நகரங்களில் அமைக்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

ஆன்லைன் வழியாக விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். ரூ.100 விண்ணப்ப கட்டணம் ஆகும். பெண்கள் எஸ்டி/எஸ்சி, உள்ளிட்ட பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.

* விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கும் நாள்: 13.04.2026
* விண்ணப்பிக்க கால அவகாசம் முடியும் நாள்: 04.05.2026
* தேர்வு கட்டணம் செலுத்த கடைசி நாள்: 05.05.2026
* விண்ணப்பத்தில் திருத்தம் செய்வதற்கான நாள்: 11.05.2026 to 13.05.2026
* கணினி வழி தேர்வு நடைபெறும் மாதம்: June, 2026 (Tentative)

தேர்வு அறிவிப்பினை படிக்க: https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Notice_of_RHQ_2026_phase_xiv.pdf

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+