மாதசம்பளம் ரூ.81,000.. நீங்க 10, பிளஸ் 2 பாஸா? உடனே விண்ணப்பிக்கலாம்.. மாஸான அரசு வேலை ரெடி
டெல்லி: மத்திய அரசின் பல்வேறு துறை மற்றும் தீர்ப்பாயங்களில் காலியாக உள்ள 1,600 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை எஸ்எஸ்சி எனும் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 10, பிளஸ் 2 முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதன் மூலம் அதிகபட்சமாக மாதம் ரூ.81 ஆயிரம் வரை சம்பளம்பெற முடியும்.
மத்திய அரசின் பல்வேறு துறைகள், தீர்ப்பாயங்கள் உள்பட வெவ்வேறு பிரிவுகளில் பணியாற்ற தேவையான ஆட்களை எஸ்எஸ்சி (Staff Selection Commission or SSC) எனும் பணியாளர் தேர்வு ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

இந்த ஆணையம் டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இதுதவிர சென்னை, பெங்களூர் உள்பட 7 இடங்களில் பிராந்திய அலுவலகங்கள் உள்ளன. அந்த வகையில் தற்போது பணியாளர் தேர்வு ஆணையம் சார்பில் ஒருங்கிணைந்த உயர்நிலை தேர்வு மூலம் 1,600 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
இந்த பணிகள் லோவர் டிவிஷன் கிளர்க்/ஜூனியர் உதவி செயலாளர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (கிரேடு ஏ) உள்ளிட்ட 3 பிரிவுகளில் நிரப்பப்பட உள்ளது. இதில் லோவர் டிவிஷன் கிளர்க்/ஜூனியர் உதவி செயலாளர் பணிக்கு மாதம் ரூ.190,00 முதல் ரூ.63,200 வரை சம்பளம் வழங்கப்படும். டேட்டோ என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு மாதம் ரூ.25,500 முதல் ரூ.9,300 வரையும், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (கிரேடு ஏ) பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.25,500 முதல் ரூ.81 ஆயிரம் வரையும் சம்பளம் வழங்கப்பட உள்ளது.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 10 அல்லது 12ம் வகுப்பு மட்டுமே முடித்திருந்தால் போதும். விண்ணப்பம் செய்வோர் 18 முதல் 21 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பத்தாரர்களின் வயது என்பது 01.08.2023 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். இந்த பணிக்கு ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், பிடபிள்யூடி பிரிவினரக்கு 10 முதில் 15 வயது வரையும் தளர்வு உண்டு.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://ssc.nic.in இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்ய ஜூ/ன் மாதம் 8 ம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்ப கட்டணமாக ரூ.100 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் என்பது இல்லை.

இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் கம்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, திறனறி தேர்வு, டைப்பிங் தேர்வு, ஆவணங்கள் சரிபார்ப்பு உள்ளிட்டவற்றுக்கு பிறகு தேர்வு செய்யப்படுவார்கள் என பணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications