நல்ல வாய்ப்பு! 10ம் வகுப்பு போதும்.. மாதம் ரூ.69,100 வரை சம்பளம்.. மத்திய ஆயுத படைகளில் 75,764 பணி
சென்னை: மத்திய பணியாளர் தேர்வாணையம் சார்பில் மத்திய அரசின் சிஆர்பிஎப், சிஐஎஸ்எப், பிஎஸ்எப் உள்பட பல்வேறு ஆயுத படைகளில் மொத்தம் 75,768 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 10 ம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக அதிகபட்சமாக ரூ.69,100 வரை கிடைக்கும்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்), மத்திய தொழிற்பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்), மத்திய ரயில்வே போலீஸ் படை (சிஆர்பிஎப்), எல்லை ஆயுதப்படை (எஸ்எஸ்பி) உள்பட பல படைகள் உள்ளன.

இந்நிலையில் தான் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission Or SSC) சார்பில் இந்த படைகளில் உள்ள கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:
காலியிடங்கள்: தற்போதைய அறிவிப்பின்படி மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் 8 படைகளில் மொத்தம் 75,768 கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு ஆண்களும், பெண்களும் விண்ணப்பம் செய்யலாம் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி வாரியாக பார்த்தால் எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்) பிரிவில் 27,875 பேர், மத்திய தொழிற்பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்) பிரிவில் 8,598 பேர், மத்திய ரயில்வே போலீஸ் படை (சிஆர்பிஎப்) பிரிவில் 25,427 பேர், எல்லை ஆயுதப்படை (எஸ்எஸ்பி) பிரிவில் 5,278 பேர், இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு போலீஸ் (ஐடிபிபி) பிரிவுக்கு 3,006 பேர், அசாம் ரைபிள்ஸ் (ஏஆர்) பிரிவுக்கு 4,776 பேர், ஸ்பெஷல் செக்யூரிட்டி போர்ஸ் (எஸ்எஸ்எப்) பிரிவுக்கு 583 பேர், என்ஐஏ (என்ஐஏ) பிரிவுக்கு 225 பேர் என மொத்தம் 75,768 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வி தகுதி-வயது வரம்பு: இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் 10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோர் 18 வயது முதல் 23 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினர் என்றால் 3 வயது வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் 5 வயது வரையும், பிடபிள்யூடி(பொது) பிரிவினர் என்றால் 10 வயது வரையும், பிடபிள்டி (ஓபிசி) பிரிவினர் என்றால் 13 வயது வரையும், பிடபிள்யூடி(எஸ்சி/எஸ்டி) பிரிவினர் என்றால் 15 வரையும் தளர்வு என்பது வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ssc.nic.in இணையதளம் மூலம் நவம்பர் 24 முதல் டிசம்பர் 28ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.100 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெண்கள், எஸ்சி, எஸ்டி, இஎஸ்எம் பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் என்பது கிடையாது. இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் நேர்க்காணல், சிபிடி தேர்வு (Computer Based Examination), உடல் திறனறி தேர்வு, உடல் தகுதி தேர்வு, மெடிக்கல் எக்ஸாமினேஷன் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
-
இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு.. 67 ஆயிரம் வரை சம்பளம்! 10, 12 ஆம் வகுப்பு தகுதி தான் -
IT JOBS: நாளை மதியம் சென்னையில் இண்டர்வியூ.. HCL-லில் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு.. செம சான்ஸ் -
திருப்பூரில் மத்திய அரசு பள்ளியில் வேலை.. மாதம் 57 ஆயிரம் வரை சம்பளம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான் -
IT JOBS: மார்ச் 14ல் பெங்களூரில் இண்டர்வியூ.. பணி சென்னையில் தான்.. HCL தரும் சூப்பர் சான்ஸ் -
RRB Group D: இந்தியன் ரயில்வேயில் 22,195 பணியிடங்கள்.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! 10 ஆம் வகுப்பு தகுதி தான் -
தமிழக அச்சுத் துறையில் வேலை.. மாதம் 57 ஆயிரம் வரை சம்பளம்.. 10ம் வகுப்பு, ஐடிஐ முடித்தவர்களுக்கு வாய்ப்பு -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு












Click it and Unblock the Notifications