நல்ல வாய்ப்பு! 10ம் வகுப்பு போதும்.. மாதம் ரூ.69,100 வரை சம்பளம்.. மத்திய ஆயுத படைகளில் 75,764 பணி
சென்னை: மத்திய பணியாளர் தேர்வாணையம் சார்பில் மத்திய அரசின் சிஆர்பிஎப், சிஐஎஸ்எப், பிஎஸ்எப் உள்பட பல்வேறு ஆயுத படைகளில் மொத்தம் 75,768 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 10 ம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக அதிகபட்சமாக ரூ.69,100 வரை கிடைக்கும்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்), மத்திய தொழிற்பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்), மத்திய ரயில்வே போலீஸ் படை (சிஆர்பிஎப்), எல்லை ஆயுதப்படை (எஸ்எஸ்பி) உள்பட பல படைகள் உள்ளன.

இந்நிலையில் தான் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission Or SSC) சார்பில் இந்த படைகளில் உள்ள கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:
காலியிடங்கள்: தற்போதைய அறிவிப்பின்படி மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் 8 படைகளில் மொத்தம் 75,768 கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு ஆண்களும், பெண்களும் விண்ணப்பம் செய்யலாம் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி வாரியாக பார்த்தால் எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்) பிரிவில் 27,875 பேர், மத்திய தொழிற்பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்) பிரிவில் 8,598 பேர், மத்திய ரயில்வே போலீஸ் படை (சிஆர்பிஎப்) பிரிவில் 25,427 பேர், எல்லை ஆயுதப்படை (எஸ்எஸ்பி) பிரிவில் 5,278 பேர், இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு போலீஸ் (ஐடிபிபி) பிரிவுக்கு 3,006 பேர், அசாம் ரைபிள்ஸ் (ஏஆர்) பிரிவுக்கு 4,776 பேர், ஸ்பெஷல் செக்யூரிட்டி போர்ஸ் (எஸ்எஸ்எப்) பிரிவுக்கு 583 பேர், என்ஐஏ (என்ஐஏ) பிரிவுக்கு 225 பேர் என மொத்தம் 75,768 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வி தகுதி-வயது வரம்பு: இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் 10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோர் 18 வயது முதல் 23 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினர் என்றால் 3 வயது வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் 5 வயது வரையும், பிடபிள்யூடி(பொது) பிரிவினர் என்றால் 10 வயது வரையும், பிடபிள்டி (ஓபிசி) பிரிவினர் என்றால் 13 வயது வரையும், பிடபிள்யூடி(எஸ்சி/எஸ்டி) பிரிவினர் என்றால் 15 வரையும் தளர்வு என்பது வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ssc.nic.in இணையதளம் மூலம் நவம்பர் 24 முதல் டிசம்பர் 28ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.100 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெண்கள், எஸ்சி, எஸ்டி, இஎஸ்எம் பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் என்பது கிடையாது. இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் நேர்க்காணல், சிபிடி தேர்வு (Computer Based Examination), உடல் திறனறி தேர்வு, உடல் தகுதி தேர்வு, மெடிக்கல் எக்ஸாமினேஷன் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
-
அதிகாலை 6 மணிக்கு மெயில்! 12,000 இந்திய ஊழியர்கள் பணி நீக்கம்! ஷாக் கொடுத்த ஐடி நிறுவனம் -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது!












Click it and Unblock the Notifications