உச்ச நீதிமன்றத்தில் வேலை.. ரூ.1 லட்சம் சம்பளம்! இப்படியொரு சான்ஸ் கிடைக்காது.. தட்டி தூக்குங்க
சென்னை: உச்ச நீதிமன்றத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சட்ட எழுத்தர் (Law Clerk) - ஆராய்ச்சி உதவியாளர் பதவியில் 90 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.1,00,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும் எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு பார்க்கலாம்.
இந்தியாவின் உயரிய நீதித்துறை அமைப்பான உச்ச நீதிமன்றத்தில் அலுவல் ரீதியிலான பணியிடங்களில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். நிரந்தர அடிப்படையிலும் ஒப்பந்த அடிப்படையிலும் இந்த பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.

பணியிடங்கள் விவரம்:
அந்த வகையில் தற்போது உச்ச நீதிமன்றத்தில் 90 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்டவற்றை பார்க்கலாம்.
சட்ட எழுத்தர் (Law Clerk) - ஆராய்ச்சி உதவியாளர் - 90 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
கல்வித் தகுதி:
கல்வித் தகுதியை பொறுத்தவரை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து இளங்கலை சட்டம் (BL) முடித்திருக்க வேண்டும். இந்திய பார் கவுன்சிலில் அட்வகேட் ஆக பதிவு செய்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் திறன் அவசியம். ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுத் திறன்கள், கணினி பற்றிய அறிவு அவசியம்.
வயது வரம்பு:
20 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைகளை பின்பற்றி வயது உச்ச வரம்பில் தளர்வு அளிக்கப்படும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப் பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டி பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 15 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம் எவ்வளவு:
சம்பளத்தை பொறுத்தவரை தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.1,00,000/- வழங்கப்படும். இப்பணியிடங்கள் முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலானது ஆகும்.
தேர்வு முறை எப்படி?
தேர்வு முறையைப் பொறுத்தவரை எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நாடு முழுக்க முக்கிய நகரங்களில் தேர்வு நடைபெறும். தமிழ்நாட்டில் சென்னையில் தேர்வு நடைபெறும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். ஆன்லைன் வழியாக மட்டுமே செலுத்த வேண்டும்.
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பை படித்து உறுதி செய்து கொள்வது அவசியம். அதில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதி, வயது வரம்பு உள்ளிட்டவை இருப்பவர்கள் https://www.sci.gov.in/
என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க 20.01.2026 அவகாசம் தொடங்கியுள்ளது. விண்ணப்பிக்க அவகாசம் முடியும் நாள்: 07.02.2026 ஆகும்.
தேர்வு அறிவிப்பை படிக்க:
https://www.sci.gov.in/recruitments/
-
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
அதிகாலை 6 மணிக்கு மெயில்! 12,000 இந்திய ஊழியர்கள் பணி நீக்கம்! ஷாக் கொடுத்த ஐடி நிறுவனம் -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
ஒரே நாளில்.. அப்படியே ஸ்டன் ஆன ஊழியர்கள்.. எத்தனை வருட ஏக்கம்.. கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications