TCS வேலைவாய்ப்பு.. பிப்ரவரி 5ம் தேதி ஆன்லைனில் இண்டர்வியூ.. சென்னையிலேயே பணி
சென்னை: டிசிஎஸ் நிறுவனம் சார்பில் பணிக்கு தேவையான ஆட்கள் பிப்ரவரி 5ம் தேதி தேர்வு செய்யப்பட உள்ளனர். அன்றைய தினம் ஆன்லைனில் நடக்கும் இண்டர்வியூவில் பிஇ, பிடெக், எம்சிஏ, எம்எஸ்சி படிப்பை முடித்தவர்கள் பங்கேற்கலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
டாடா குழுமத்தின் ஒரு பகுதியாக செயல்பட்டு வரும் ஐடி நிறுவனம் தான் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ். சுருக்கமாக டிசிஎஸ் என அழைக்கப்படுகிறது. நம் நாட்டின் பல்வேறு இடங்களில் டிசிஎஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் சென்னையில் இந்த நிறுவனம் அமைந்துள்ளது. இந்நிலையில்தான் சென்னை டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
இப்போது ஐடி துறையில் பணியாற்றுவது என்பது இளைஞர்களின் கனவாக உள்ளது. குறிப்பாக பிரபலமான டிசிஎஸ் நிறுவனத்தில் தற்போத சிட்ரிக்ஸ் அட்மின் (Citrix Admin) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஸ்கில்செட்டாக Citrix Admin, XenApp & XenDesktop உள்ளிட்டவற்றில் ஸ்கில்செட் கொண்டிருக்க வேண்டும்.
அதோடு சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 3 ஆண்டு முதல் அதிகபட்சம் 7 ஆண்டு வரையிலான பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். பிஇ, பிடெக், எம்சிஏ, எம்எஸ்சி, எம்எஸ் படிப்புகளை முடித்து குறைந்தபட்சம் 3 ஆண்டு ஐடி துறையில் பணியாற்றி இருக்க வேண்டும்.
கடந்த ஒரு மாதத்தில் டிசிஎஸ் நிறுவனத்தின் பிற இண்டர்வியூக்களில் பங்கேற்றவர்கள் இதில் பங்கேற்க அனுமதியில்லை. இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது பிப்ரவரி 5ம் தேதி (நாளை) நடைபெற உள்ளது. இண்டர்வியூ என்பது ஆன்லைனில் தான் நடைபெற உள்ளது.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பள விபரம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications