டி.என்.பி.எஸ்.சியில் 117 குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் வேலைக்கு ஆளெடுக்கிறார்கள்!
சென்னை: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் என்படும் டி.என்.பி.எஸ் சார்பில் தமிழகத்தில் காலியாக உள்ள 117 குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
முழுக்க, முழுக்க பெண்களுக்கான வேலைவாய்ப்பான இப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் தகுதியுள்ள பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன.
மொத்த இடங்கள்: 117
கல்வித்தகுதி: ஊட்டச்சத்து, ஹோம் சயின்ஸ் ஆகிய பிரிவுகளில் பட்டப்படிப்பு அல்லது கிராமப்புற அபிவிருத்தி குறித்த பிரிவில் முதுநிலை பட்டத்தினை காந்திகிராம பல்கலைகழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயதிலிருந்து 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்ச்சி அளிக்கப்படும்.
சம்பள விகிதம்: 9300/- முதல் 34800/- வரை + 4500/-
தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்துத்தேர்வு + நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் டி.என்.பி.எஸ்.சியின் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கவும் அல்லது இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 26, 2014
மேலும், இதுகுறித்த விவரங்களுக்கும், மற்ற வேலைவாய்ப்பு செய்திகளுக்கும் jobs.oneindia.com இணையதளத்தைப் பார்வையிடுங்கள்.