Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிஎன்பிஎஸ்சி நேர்காணலில் வரும் மெகா மாற்றம்! "இனி தவறுகள் நடக்க நோ சான்ஸ்.." இது சூப்பர் பிளான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிஎன்பிஎஸ்சி நேர்முகத் தேர்வில் குளறுபடிகள் நடக்க வாய்ப்புள்ளதாகச் சமீபத்தில் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், நேர்முகத் தேர்வில் புதிய நடைமுறையைப் பின்பற்றவுள்ளதாகத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இப்போது அரசுப் பணியிடங்கள் அனைத்தும் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாகவே நிரப்பப்படுகிறது. இதில் பெரும்பாலான தேர்வுகள் எழுத்துத் தேர்வு முறையிலேயே நடைபெறுகிறது.

 TNPSC to introduce new procedure for interview in tnpsc jobs

அதேநேரம் க்ரூப் 1 உள்ளிட்ட சில பணியிடங்களுக்கு மட்டுமே எழுத்துத் தேர்வுடன் நேர்காணலும் நடைபெறுகிறது. இருப்பினும், நேர்காணலில் குளறுபடி நடக்க வாய்ப்புள்ளதாகவும் பாரபட்சமான முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் இருக்கிறது.

கோரிக்கை: தமிழ்நாடு மட்டுமின்றி நாட்டில் பல மாநிலங்களிலும் இதுபோன்ற புகார்கள் எழுந்து கொண்டே தான் இருக்கிறது. இதன் காரணமாகவே நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் அனைத்து பணியிடங்களுக்கும் நேர்முகத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, எழுத்துத் தேர்வு மூலம் மட்டுமே பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.

சமீபத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கூட இது குறித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். எழுத்துத் தேர்வுகளின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதனடிப்படையில் அனைத்துப் பணிகளுக்கும் தகுதியானவர்களைத் தேர்வு செய்வது தான் சரியாக இருக்கும்; வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும் என்று அவர் கூறியிருந்தார்.

டிஎன்பிஎஸ்சி நேர்முகத் தேர்வு: இதற்கிடையே டிஎன்பிஎஸ்சி நேர்முகத் தேர்வு நேர்முகத் தேர்வு குறித்து முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இனி வரும் காலத்தில் நேர்முகத் தேர்வில் இந்த புதிய நடைமுறையைப் பின்பற்றவுள்ளதாகத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "டிஎன்பிஎஸ்சி கொள்கைபடி அரசுப் பணிக்குத் தேர்வு செய்யும் பணிகளில் வெளிப்படைத்‌ தன்மை மற்றும்‌ நம்பகத்தன்மையை மேம்படுத்தத் தொடர் நடவடிக்கை மற்றும் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதன்‌படி இனி நேர்முகத்‌ தேர்வுகளுக்கு (Oral Test) அழைக்கப்படும் நபர்களின் பெயர்‌, போட்டோ, பிறந்த தேதி உள்ளிட்ட அடையாளங்கள்‌ மறைக்கப்படும்.

புதிய முறை: அதற்குப் பதிலாக A, B, C, D என்பது போல ஆங்கில எழுத்துகள் அடிப்படையில் அவர்கள் நேர்காணல்‌ ரூமிற்கு அனுமதிக்கப்படுவர்‌. விண்ணப்பதாரர்களின் அடையாளம் மறைக்கப்படுவதன் மூலம் நேர்காணலின் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படுகிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

நேர்முகத் தேர்வில் முறைகேடுகளுக்கு வாய்ப்புள்ளதாகச் சமீப காலமாகப் பலரும் கூறி வரும் நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திடம் இருந்து வந்த இந்த அறிவிப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அரசுப் பணிகளுக்குத் தேர்வு செய்யும் நடைமுறையில் எந்தவொரு பாரபட்ச முடிவுகளும் இருக்காது என்றும் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+