10ம் வகுப்பு முடித்தாலே போதும்.. தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு! வெளியான அறிவிப்பு
வேலூர்: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10ம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்து பயன்பெறலாம். இதுதொடர்பான முழுவிபரம் வருமாறு:
மத்திய அரசின் என்ஏபிஎஸ்(NAPS) திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு பல்வேறு துறைகளில் பணிவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தான் தற்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் வேலூர் மண்டலத்தில் என்ஏபிஎஸ் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

டிஎன்எஸ்டிசி எனும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தற்போது வேலூரில் காலியாக உள்ள 90 மெக்கானிக்(மோட்டார் வாகனம்) பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் மத்திய அல்லது மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.

இது அப்ரென்டீஸ் வகை பணியாகும். இதனால் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை உதவித்தொகையாக வழங்கப்படும். மொத்தம் 25 மாதம் பணி வழங்கப்படும். முதல் 6 மாதம் என்பது அடிப்படை பயிற்சி காலமாகவும், அடுத்த 19 மாதம் பணி பயிற்சி காலமாகவும் இருக்கும்.
விருப்பம் மற்றும் தகுதி உள்ளவர்கள் NAPS இணையதளம் சென்று ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் நேர்க்காணல் மற்றும் சான்று சரிபார்ப்பின் கீழ் தேர்வு செய்யப்படுவார்கள்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications