தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு.. 8 மண்டலங்களில் பணி..விண்ணப்பிக்க நல்ல வாய்ப்பு
சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் சென்னை உள்பட 8 மண்டலங்களில் காலியாக உள்ள 346 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி 8 மண்டலங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:

காலியிடங்கள் எவ்வளவு?
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் மொத்தம் மொத்தம் 346 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. Diploma பிரிவில் 177, Graduate பிரிவில் 169 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மண்டலம் வாரியாக விழுப்புரத்தில் 96, கும்பகோணத்தில் 83, சேலத்தில் 29, மதுரையில் 26, திண்டுக்கல்லில் 23, தர்மபுரியில் 23, விருதுநகரில் 22, சென்னையில் 44 என மொத்தம் 346 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

கல்வி தகுதி என்ன?
இந்த பணிகள் அனைத்தும் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் பிரிவில் நிரப்பப்பட உள்ளது. விண்ணப்பம் செய்ய விரும்புவர்கள் என்ஜினீயரிங் படிப்பு (Graduate) அல்லது டிப்ளமோ படிப்பை முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று முடித்திருக்க வேண்டும். 2020, 2021, 2022ல் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

சம்பளம் எவ்வளவு?
இது Apprentice வகை பணி என்பதால் Graduate Apprentice பணிக்கு மாதம் ரூ.9 ஆயிரமும், Diploma Apprentice பணிக்கு மாதம் ரூ.8 ஆயிரமும் Stipend ஆக வழங்கப்படும். வயது வரம்பை பொறுத்தமட்டில் Apprentice விதிகள் பின்பற்றப்பட உள்ளது. தேர்வாகும் நபர்களுக்கு ஓராண்டு வரை பயிற்சியுடன் கூடிய உதவித்தொகை வழங்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் டிசம்பர் மாதம் 18 ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணம் எதுவும் கிடையாது. இவ்வாறு விண்ணப்பம் செய்பவர்கள் மதிப்பெண் அடிப்படையில் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் முதலில் www.mhrdnats.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்வது அவசியமாகும்.
வேலை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here












Click it and Unblock the Notifications