தமிழகத்தில் 3,644 போலீஸ் கான்ஸ்டபிள் பணியிடங்கள்.. ஹால் டிக்கெட் வந்தாச்சு.. உடனே செக் பண்ணுங்க
சென்னை: தமிழக காவல்துறையில் 2,833 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்கள் மற்றும் சிறை, சீர்திருத்த துறையில் 180 காலிப்பயணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதில் தற்போது ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக காவல்துறையில் காலியாக உள்ள இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்ப கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு வெளியானது. 2 ஆம் நிலை காவலர் பணியிடங்கள் 2,833 மற்றும் சிறை மற்றும் சீர்திருத்த துறையில் 180 காலிப்பணியிடங்களும் தீ அணைப்பு துறையில் 631 தீ அணைப்பாளர் பணியிடங்களும் அறிவிக்கப்பட்டன.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் செப்டம்பர் 21 ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. காவலர் பணியில் சேர வேண்டும் என்ற கனவுடன் படித்து வந்த தேர்வர்கள் இந்த காவலர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வுக்கு ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர்.
கல்வித் தகுதி
எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் காவலர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். காவலர் பணியிடங்களுக்கு குறைந்தபட்ச கல்வி தகுதி பத்தாம் வகுப்பு ஆகும்.
வயது வரம்பு
18 வயது நிரம்பியவராகவும், 26 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.18,200 முதல் 67,100 வரை சம்பளமாக கிடைக்கும் என்பதாலும் எல்லாவற்றிற்கும் அரசு பணி, மக்களுக்கு சேவையாற்ற முடியும் என்பதால் தேர்வர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர்.
ஹால் டிக்கெட் வெளியீடு
விண்ணப்ப அவகாசம் கடந்த மாதமே முடிந்த நிலையில், விண்ணப்பதாரர்களுக்கு ஹால் டிக்கெட் வெளியிடுவதற்கான பணிகளில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் ஈடுபட்டு இருந்தது. வரும் நவம்பர் மாதம் 9 ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வர்கள் https://tnusrb.cr.2025.ucanapply.com/login என்ற இணையதளத்திற்கு சென்று தங்கள் யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு கொடுத்து டவுன்லோடு செய்து கொள்ளளாலாம். ஹால் டிக்கெட்டில் தேர்வு நடைபெறும் தேதி, தேர்வு மையம் அமைந்துள்ள இடம், தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய விதிகள் உள்ளிட்டவை இடம் பெற்று இருக்கும்.
அரை மணி நேரம் முன்பாகவே
தேர்வர்கள் இந்த விதிகளை கவனமாக படித்து தெரிந்து கொள்ளவும். தேர்வு மையத்தில் அனுமதிக்கப்படும் நேரத்திற்கு சரியாக சென்று விடுமாறு அறிவுறுத்தப்படுகிறது. கடைசி நேரத்தில் போய் நின்று பதற்றத்துடன் செல்வதை தவிர்க்க அரை மணி நேரம் முன்பாகவே தேர்வு கூடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications