இந்திய வனத்துறையில் அதிகாரி ஆகணுமா? டிகிரி முடித்து இருந்தால் போதும்.. யுபிஎஸ்சி கொடுத்த சூப்பர் சான்ஸ்
சென்னை: இந்திய வனத்துறை சேவைகளுக்கான தேர்வு அறிவிப்பை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. மொத்தம் 80 காலியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப் பிக்க கடைசிநாள் எப்போது? கல்வித்தகுதி என்ன என்பது தொடர்பான விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.
மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையமான யுபிஎஸ்சி, ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் (வனத்துறை) உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கான பணியிடங்களை நிரப்பி வருகிறது. இந்தியாவில் உள்ள அரசு பதவிகளில் உயர்ந்த பதவியாக இவை இருப்பதால், நாடு முழுவதும் உள்ள பல லட்சக்கணக்கான இளைஞர்களின் லட்சியங்களில் ஒன்றாக இது உள்ளது. இந்திய வனத்துறை அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
இந்திய வனத்துறை தேர்வு: 80 பணியிடங்கள். கல்வித்தகுதியைப் பொறுத்தவரை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து டிகிரி முடித்து இருக்க வேண்டும். கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை அறிவியல், தாவரவியல், வேதியியல், புவியியல், கணிதம், இயற்பியல், புள்ளியியல் மற்றும் விலங்கியல் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒரு பாடத்தில் இளங்கலை பட்டம் அல்லது வேளாண்மை, வனவியல் அல்லது பொறியியலில் இளங்கலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 1 ஆகஸ்ட் 2026 அன்று குறைந்தது 21 வயதை எட்டியிருக்க வேண்டும் மற்றும் 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதாவது, விண்ணப்பதாரர்கள் 2 ஆகஸ்ட் 1994 அன்று அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்களாகவும், 1 ஆகஸ்ட் 2005 அன்று அல்லது அதற்கு முன்பு பிறந்தவர்களாகவும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு +5 ஆண்டுகள், ஓபிசி பிரிவினருக்கு +3 ஆண்டுகள் வழங்கப்படும்.
தேர்வு முறை:
முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று கட்டத் தேர்வுகளுக்குப் பிறகு தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முதல் நிலைத் தேர்வு: சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, வேலூர் ஆகிய நகரங்களில் நடைபெறும்.
முதன்மைத் தேர்வு: சென்னையில் நடைபெறும்.
விண்ணப்பிப்பது எப்படி?
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பைப் படித்து உறுதி செய்து கொண்ட பிறகு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ. 100 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் இல்லை. விண்ணப்பிக்க வரும் 24.02.2026 கடைசி நாளாகும்.
தேர்வு அறிவிப்பைப் படிக்க:
https://upsc.gov.in/sites/default/files/Notif-IFSP-26-Engl-040226.pdf
-
சென்ட்ரல் வங்கியில் வேலைவாய்ப்பு.. மாதம் 1.20 லட்சம் சம்பளம்.. பி.இ முடித்தவரக்ளுக்கு வாய்ப்பு -
IT Jobs:சோழிங்கநல்லூரில் ஐடி வேலை.. சென்னை HCL அலுவலகத்தில் நாளை – நாளை மறுநாள் இண்டர்வியூ! -
IT Jobs: 7 பிரிவுகளில் காலியிடங்கள்.. டிசிஎஸ் தரும் சூப்பர் சான்ஸ்.. ஏப்ரல் 18-ல் இண்டர்வியூ -
உத்தரப் பிரதேசத்தில் கொழுந்துவிட்டு எரியும் தீ! சம்பள பிரச்சனையில் தொழிலாளர்கள் ஆவேசம்! -
பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. இன்னும் 2 நாட்கள் தான் இருக்கு! உடனே விண்ணப்பிங்க -
நிலக்கரி நிறுவனத்தில் 1,055 காலியிடங்கள்.. 47 ஆயிரம் சம்பளம்! மத்திய அரசு கம்பெனிங்க.. விட்றாதீங்க -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன்












Click it and Unblock the Notifications