இந்திய வனத்துறையில் அதிகாரி ஆகணுமா? டிகிரி முடித்து இருந்தால் போதும்.. யுபிஎஸ்சி கொடுத்த சூப்பர் சான்ஸ்
சென்னை: இந்திய வனத்துறை சேவைகளுக்கான தேர்வு அறிவிப்பை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. மொத்தம் 80 காலியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப் பிக்க கடைசிநாள் எப்போது? கல்வித்தகுதி என்ன என்பது தொடர்பான விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.
மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையமான யுபிஎஸ்சி, ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் (வனத்துறை) உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கான பணியிடங்களை நிரப்பி வருகிறது. இந்தியாவில் உள்ள அரசு பதவிகளில் உயர்ந்த பதவியாக இவை இருப்பதால், நாடு முழுவதும் உள்ள பல லட்சக்கணக்கான இளைஞர்களின் லட்சியங்களில் ஒன்றாக இது உள்ளது. இந்திய வனத்துறை அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
இந்திய வனத்துறை தேர்வு: 80 பணியிடங்கள். கல்வித்தகுதியைப் பொறுத்தவரை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து டிகிரி முடித்து இருக்க வேண்டும். கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை அறிவியல், தாவரவியல், வேதியியல், புவியியல், கணிதம், இயற்பியல், புள்ளியியல் மற்றும் விலங்கியல் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒரு பாடத்தில் இளங்கலை பட்டம் அல்லது வேளாண்மை, வனவியல் அல்லது பொறியியலில் இளங்கலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 1 ஆகஸ்ட் 2026 அன்று குறைந்தது 21 வயதை எட்டியிருக்க வேண்டும் மற்றும் 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதாவது, விண்ணப்பதாரர்கள் 2 ஆகஸ்ட் 1994 அன்று அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்களாகவும், 1 ஆகஸ்ட் 2005 அன்று அல்லது அதற்கு முன்பு பிறந்தவர்களாகவும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு +5 ஆண்டுகள், ஓபிசி பிரிவினருக்கு +3 ஆண்டுகள் வழங்கப்படும்.
தேர்வு முறை:
முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று கட்டத் தேர்வுகளுக்குப் பிறகு தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முதல் நிலைத் தேர்வு: சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, வேலூர் ஆகிய நகரங்களில் நடைபெறும்.
முதன்மைத் தேர்வு: சென்னையில் நடைபெறும்.
விண்ணப்பிப்பது எப்படி?
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பைப் படித்து உறுதி செய்து கொண்ட பிறகு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ. 100 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் இல்லை. விண்ணப்பிக்க வரும் 24.02.2026 கடைசி நாளாகும்.
தேர்வு அறிவிப்பைப் படிக்க:
https://upsc.gov.in/sites/default/files/Notif-IFSP-26-Engl-040226.pdf
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications