இந்திய வனத்துறையில் அதிகாரி ஆகணுமா? டிகிரி முடித்து இருந்தால் போதும்.. யுபிஎஸ்சி கொடுத்த சூப்பர் சான்ஸ்
சென்னை: இந்திய வனத்துறை சேவைகளுக்கான தேர்வு அறிவிப்பை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. மொத்தம் 80 காலியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப் பிக்க கடைசிநாள் எப்போது? கல்வித்தகுதி என்ன என்பது தொடர்பான விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.
மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையமான யுபிஎஸ்சி, ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் (வனத்துறை) உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கான பணியிடங்களை நிரப்பி வருகிறது. இந்தியாவில் உள்ள அரசு பதவிகளில் உயர்ந்த பதவியாக இவை இருப்பதால், நாடு முழுவதும் உள்ள பல லட்சக்கணக்கான இளைஞர்களின் லட்சியங்களில் ஒன்றாக இது உள்ளது. இந்திய வனத்துறை அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
இந்திய வனத்துறை தேர்வு: 80 பணியிடங்கள். கல்வித்தகுதியைப் பொறுத்தவரை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து டிகிரி முடித்து இருக்க வேண்டும். கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை அறிவியல், தாவரவியல், வேதியியல், புவியியல், கணிதம், இயற்பியல், புள்ளியியல் மற்றும் விலங்கியல் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒரு பாடத்தில் இளங்கலை பட்டம் அல்லது வேளாண்மை, வனவியல் அல்லது பொறியியலில் இளங்கலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 1 ஆகஸ்ட் 2026 அன்று குறைந்தது 21 வயதை எட்டியிருக்க வேண்டும் மற்றும் 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதாவது, விண்ணப்பதாரர்கள் 2 ஆகஸ்ட் 1994 அன்று அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்களாகவும், 1 ஆகஸ்ட் 2005 அன்று அல்லது அதற்கு முன்பு பிறந்தவர்களாகவும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு +5 ஆண்டுகள், ஓபிசி பிரிவினருக்கு +3 ஆண்டுகள் வழங்கப்படும்.
தேர்வு முறை:
முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று கட்டத் தேர்வுகளுக்குப் பிறகு தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முதல் நிலைத் தேர்வு: சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, வேலூர் ஆகிய நகரங்களில் நடைபெறும்.
முதன்மைத் தேர்வு: சென்னையில் நடைபெறும்.
விண்ணப்பிப்பது எப்படி?
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பைப் படித்து உறுதி செய்து கொண்ட பிறகு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ. 100 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் இல்லை. விண்ணப்பிக்க வரும் 24.02.2026 கடைசி நாளாகும்.
தேர்வு அறிவிப்பைப் படிக்க:
https://upsc.gov.in/sites/default/files/Notif-IFSP-26-Engl-040226.pdf
-
RRB Group D: இந்தியன் ரயில்வேயில் 22,195 பணியிடங்கள்.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! 10 ஆம் வகுப்பு தகுதி தான் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
IT JOBS: நாளை மதியம் இண்டர்வியூ.. HCL வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. சென்னையில் பணி -
ஐடிஐபி வங்கியில் வேலை.. 1,300 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! மாதம் 50 ஆயிரம் சம்பளம்! -
UPSC தேர்வு.. தமிழ்நாட்டில் இருந்து வென்ற 60 பேரில்.. 56 பேர் நான் முதல்வன் திட்டத்தில் பயின்றவர்கள் -
அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை.. தமிழக அரசு வெளியிட்ட குட்நியூஸ்.. அரசாணையை கவனித்தீர்களா? -
யுபிஎஸ்சி தேர்வில் 56 பேர் தேர்ச்சி! நான் முதல்வன் திட்டத்தின் முதற்பகுதியே இப்படியா? ஸ்டாலின் -
UPSC Top 10: யுபிஎஸ்சி தேர்வில் முதல் 10 இடங்களில் தேர்ச்சி பெற்ற 2 தமிழக மாணவர்கள்! யார் அவர்கள்? -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி












Click it and Unblock the Notifications