வருகிறது 8வது ஊதியக்குழு.. 44% சதவிகிதம் உயருகிறது சம்பளம்.. ஊழியர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஜனவரி 1, 2024க்குள் 8வது ஊதியக் குழுவை அமைக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அதற்கு முன்.. இன்னும் சில நாட்களில் இந்த ஊதியக்குழு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

8வது ஊதியக்குழு அமலாக்கத்தால், ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதிய பலன்கள் உயரும். இது குறித்து அதிகாரிகளிடமிருந்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக, புதிய ஊதியக் குழு பரிந்துரைகளை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசு அமல்படுத்தும். 7வது ஊதியக்குழு ஜனவரி 1, 2016 முதல் அமலில் இருந்து வருகிறது.

jobs job old pension scheme pension

2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாவது ஊதியக் குழுவை மோடி அரசு அறிவிக்கும் என்று அகில இந்திய ரயில்வே கூட்டமைப்பு பொதுச் செயலாளர் சிவகோபால் மிஸ்ரா கணித்துள்ளார்.

எவ்வளவு உயரும்?: 7வது ஊதியக் குழுவின் சம்பளத் திருத்தம் செய்த போதே ஊழியர் சங்கங்கள் 3.68 ஃபிட்மென்ட் காரணியைக் கோரியிருந்தன, ஆனால் அரசாங்கம் 2.57 ஃபிட்மென்ட் காரணியை முடிவு செய்தது.

6வது ஊதியக் குழுவில் 7,000 ரூபாய் அடிப்படை ஊதியம் வழங்கப்பட்டது. அந்த 7 ஆயிரம் ரூபாயுடன் ஒப்பிடுகையில், 7வது ஊதியக் குழுவில் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் மாதம் 18,000 ரூபாயாக மாறியது. குறைந்தபட்ச ஓய்வூதியமும் ரூ.3,500ல் இருந்து ரூ.9,000 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்ச சம்பளம் ₹2,50,000 ஆகவும், அதிகபட்ச ஓய்வூதியம் ₹1,25,000 ஆகவும் ஆனது.

இப்போது, 8வது ஊதியக் குழுவிற்கு 1.92 ஃபிட்மென்ட் காரணி அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சம்பளம் 44% வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 8வது வருமான கமிஷன் அமைப்பதற்கான பரிந்துரை அமைச்சரவை சார்பாக பிரதமர் மோடிக்கு சமீபத்தில் அளிக்கப்பட்டு உள்ளது.

பரிந்துரை: 1 கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 8வது மத்திய ஊதியக் குழுவை உருவாக்குவதற்கு ஆவலுடன் காத்திருக்கின்றனர். இது அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் பிற சலுகைகள் தொடர்பான பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொண்டு அதன் பரிந்துரைகளை அரசாங்கத்திடம் சமர்ப்பித்து உள்ளது..

7வது ஊதியக் குழு அமலுக்கு வந்ததில் இருந்து 10 ஆண்டுகள் இடைவெளியுடன், அடுத்த ஊதியக் குழுவை 2025 அமல்படுத்த வேண்டும். பொதுவாக இரண்டு வெவ்வேறு ஊதியக் கமிஷன்களை அமல்படுத்துவதற்கு இடையே 10 ஆண்டுகள் இடைவெளியை மத்திய அரசு பின்பற்றுகிறது.

ஆனால், அடுத்த ஊதியக் குழு அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு இதுவரை வாய் திறக்காமல் இருந்தது. லோக்சபா தேர்தல் முடிந்து, மோடி 3.0 தலைமையில், 8வது சம்பள கமிஷன் அமைப்பது குறித்த சலசலப்பு தற்போது வலுத்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் 8வது வருமான கமிஷன் அமைப்பதற்கான பரிந்துரை அமைச்சரவை சார்பாக பிரதமர் மோடிக்கு சமீபத்தில் அளிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில்.. சம்பளம் 44% வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 8வது கமிஷன் இருந்தால் அடுத்த வருடம் முதல் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+