IT ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்! விப்ரோ, இன்போசிஸ் கொடுத்த இன்ப அதிர்ச்சி! இந்த வருஷம் சூப்பர்!
சென்னை: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) வந்ததால், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலையை இழந்தனர். அவ்வளவுதான் ஐடி துறை மொத்தமாக முடியப்போகுது என்று சொல்லிக்கொண்டிருந்த நிலையில், தற்போது விப்ரோ, இன்போசிஸ் தனது ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறது.
கடந்த 2024-2025 காலகட்டம் ஐடி ஊழியர்களுக்கு போதாத காலம் என்றே சொல்லலாம். ஏஐ காரணமாக ஏராளமானோர் வேலையை விட்டு நீக்கப்பட்டனர். வழக்கமாக ஐடி துறையில் வேலை இழப்புகள் இருக்கத்தான் செய்யும். ஆனால், இந்த முறை அது கொஞ்சம் கொடூரமாகவே இருந்தது.

ட்விஸ்ட் வைத்த நிறுவனங்கள்
2024-2025 காலகட்டத்தில் மொத்தம் 60,000-80,000 ஐடி ஊழியர்கள் வேலையை விட்டு தூக்கப்பட்டனர். இதில் விப்ரோ, இன்போசிஸ், டிசிஎஸ் போன்ற நிறுவனங்களில் வேலை இழப்புகள் 20-30% வரை இருந்தன. இதனால் ஐடி துறையின் கதை முடியப்போகிறது என்று பலரும் நினைக்க தொடங்கினர். மனிதர்கள் செய்யும் வேலையை மெஷின்கள் செய்கிறது எனில், எதற்காக மனிதர்கள் என்று கேள்வி எழுந்தது. ஆனால், இங்குதான் ட்விஸ்ட் நடந்தது.
இன்ப அதிர்ச்சி
மெஷின்களை வைத்து, அதாவது ஏஐ தொழில்நுட்பத்தை வைத்து மேலும் தனது உற்பத்தியை அதிகரிக்க ஏஐ+மனித வளத்தை நிறுவனங்கள் பயன்படுத்த தொடங்கின. தற்போது லே ஆஃப் படலம் முடிவுக்கு வந்திருக்கிறது. இந்நிலையில் விப்ரோ, இன்போசிஸ் தனது ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறது.
சம்பள உயர்வு
அதாவது நீண்ட தாமதத்திற்கு பிறகு துனது ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை மார்ச் 1 முதல் அமல்படுத்துவதாக விப்ரோ அறிவித்திருக்கிறது. பொருளாதார மந்த நிலை, இதர செலவினம் போன்ற காரணங்களால் சம்பள உயர்வு தள்ளிப்போய் இருக்கிறது. இப்படி இருக்கையில் இப்போது சம்பள உயர்வு அறிவிப்பு வெளியாகியிருப்பது ஐடி ஊழியர்கள் மத்தியில் சந்தோசத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இருப்பினும் எத்தனை சதவிகிதம் சம்பள உயர்வு என்பது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.
இன்போசிஸும் போனஸ் அறிவிப்பு
விப்ரோவை தொடர்ந்து இன்போசிஸும் சம்பள உயர்வை அறிவித்திருக்கிறது. போனஸை 85% அறிவித்திருக்கிறது. கடந்த 3.5 ஆண்டுகளில் வழங்கப்பட்ட போனஸை விட, இது மிக அதிகம். இதில் தகுதி உள்ள ஜூனியர் ஊழியர்களுக்கு 100% வரை போனஸ் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பிப்ரவரி மாத சம்பளத்துடன் இந்த போனஸ் கணக்கில் சேரும்.
-
அதிகாலையில் வந்த மெயில்.. மீண்டும் வேலையை காட்டிய மெட்டா! ஊழியர்கள் கண்ணீர்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications