‛‛வீட்டில் இருந்தே வேலை’’.. ஆபிஸ் போக வேண்டாம்.. அழைக்கும் பிரபல ஐடி நிறுவனம்.. தேதி முடியப்போகுது
சென்னை: பிரபல ஐடி நிறுவனத்தில் ‛வொர்க் ஃப்ரம் ஹோம்' முறையில் சாப்ட்வேர் என்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கான தேதி விரைவில் முடிவடைய உள்ளதால் விரைந்து தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விரைந்து விண்ணப்பம் செய்வது அவசியமாகும்.
தற்போது பலருக்கும் ஐடி நிறுவனங்களில் பணி செய்ய வேண்டும் என்ற ஆசை உள்ளது. இதனால் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி உள்ளிட்டவை தவிர வேறு படிப்பை முடித்தவர்களும் கூட தனியே ஐடி வேலைக்கு தேவையான கோர்ஸை தனியே படித்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் தற்போது பல்வேறு ஐடி நிறுவனங்களில் இருந்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அந்த வகையில் ‛யே குளோபல்' (Yeah Global) சார்பில் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Yeah Global சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தற்போது இந்தியாவில் சாப்ட்வேர் என்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணி என்பது 1000 சதவீதம் Remote முறையை கொண்டதாகும். அதாவது வீட்டில் இருந்து தான் பணியாற்ற வேண்டும்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் இளங்கலை படிப்பு அல்லது அதற்கு நிகரான தொழில்நுட்ப படிப்பை முடித்திருக்க வேண்டும். அதோடு ப்ரோகிராம் லேங்குவேஜ்களான சி, சி++, சி#, ஜாவா, ஜாவா ஸ்கிரரிப்ட் அல்லது பைத்தான் உள்ளிட்டவற்றை கற்று பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும். பிக் டேட்டா மற்றம் ஸ்ட்ரீமிங் பிளாட்பார்ம்ஸ்களான Storm, Hadoop, Cosmos உள்ளிட்டவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கான மாதசம்பளம் பற்றிய எந்த விபரமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் நல்ல சம்பளம் வழங்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் இந்த பணி தொடர்பான அறிவிப்பு வெளியாகி சில நாட்கள் ஆகிவிட்டது. ஆனாலும் தற்போது வரை விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி என்பது தெரிவிக்கப்படவி்ல்லை.
இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது நல்லதாகும். ஏனென்றால் விண்ணப்ப காலக்கெடு எப்போது வேண்டுமானாலும் முடிவுக்கு வரலாம். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் Yeah Global இணையதளம் சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
தமிழக அச்சுத் துறையில் வேலை.. மாதம் 57 ஆயிரம் வரை சம்பளம்.. 10ம் வகுப்பு, ஐடிஐ முடித்தவர்களுக்கு வாய்ப்பு -
திருப்பூரில் மத்திய அரசு பள்ளியில் வேலை.. மாதம் 57 ஆயிரம் வரை சம்பளம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான் -
RRB Group D: இந்தியன் ரயில்வேயில் 22,195 பணியிடங்கள்.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! 10 ஆம் வகுப்பு தகுதி தான் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications