ஆர் யூ ரிலாக்சிங்? அறைவிட்ட விஜயகாந்த்
கேப்டனிடம் அறை வாங்குவது என்றால் ஒரு சிலருக்கு அல்வா சாப்பிடுவது போல. பெயரை மாற்றி சொல்லிவிட்டு வேட்பாளரின் தலையிலேயே கொட்டு வைத்தவர் நம்ம கேப்டன் விஜயகாந்த்.
தமிழ்நாடே பத்திக்கிட்டு எரியும் போது மகனின் படப்பிடிப்பிற்காக மலேசியா போனவர்தான் நம்ம கேப்டன். அவரை கடுப்பேற்றினால் கன்னத்தில் அறையாமல் விடுவாரா? மேற்கொண்டு படியுங்களேன்.
கோவா கடற்கரையில் நம்ம கேப்டன் விஜயகாந்த் ஓய்வெடுத்துக்கொண்டு இருந்தார். அப்போ அங்கே நடந்த உரையாடல்.
அமெரிக்கர்: "ஆர் யு ரிலாக்சிங்?"
விஜயகாந்த்: நோ ஐ‘ம் விஜயகாந்த்
மற்றொரு நபர்: "ஆர் யு ரிலாக்சிங் ?"
உடனே கடுப்பாகிறார் கேப்டன்
விஜயகாந்த்: "நோ ஐ‘ம் விஜயகாந்த்"
பிறகு இடத்தை மாற்ற முடிவு செய்த விஜயகாந்த் நடக்க ஆரம்பித்தார். அப்போது அங்கே கடற்கரையில் ஒருவர் ஹாயாக அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்த விஜயகாந்த் அவரிடம் சென்று, "ஆர் யு ரிலாக்சிங்?" என்று கேட்டார்.
உடனே அவர் "யெஸ்" என்று சொல்லவே கடுப்பான கேப்டன், அவர் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டார்.
" உன்னைத்தாண்டா எல்லோரும் அங்கே தேடிக்கிட்டு இருக்காங்க, நீ என்னடான்னா இங்க உட்காந்துகிட்டு இருக்கே ! " ஆங்ங்ங்...