ஏடிஎம்ல பணம் வருமான்னு கேட்டதுக்கு கடவுளே மயங்கிட்டாரே?
500,1000 ரூபாய் செல்லாது என்ற பிரதமர் மோடி அறிவித்த பின்னர் வங்கி வாசல்களிலும், ஏடிஎம் வாசல்களிலும் மணிக்கணிக்கில் மக்கள் காத்திருக்கின்றனர். 50 நாட்கள் ஆகிவிட்டது.
ஃபேஸ்புக்கில் இன்று படித்த காமெடி மக்களின் இன்றைய நிலையை உணர்த்துகிறது.
ஏடிஎம்மில் பணமில்லாம அவஸத்தை படுற மக்களுக்கு ஆறுதல் சொல்ல ஒருநாள் கடவுளே பூமிக்கு வந்துட்டாரு...
அவர்ட்ட ஒருத்தரு சாமி என்னோட இந்தியன் பேங்க் ஏடிஎம்ல எப்ப பணம் வரும்னு கேட்டாரு அதுக்கு கடவுள் இன்னும் மூணுநாள்ல வந்துடும்னு சொன்னத கேட்டு ஐயோ மூணுநாளா அதுவரைக்கும் என்னால பசி தாங்க முடியாதேன்னு கேட்டவரு மயங்கி விழுந்துட்டாரு...
அடுத்து இன்னொருத்தரு... சாமி என்னோட ஆந்திரா பேங்க் ஏடிஎம்ல எப்ப பணம் வரும்னு கேட்டாரு அதுக்கும் கடவுள் ஒரு அஞ்சு நாளாகும்ப்பான்னு சொன்னத கேட்டு அய்யோ அஞ்சு நாளா அதுவரைக்கும் என்னோட குடும்பம் உயிரோட இருக்க முடியாதேன்னு மயங்கி விழுந்துடுறாரு...
அடுத்ததா இன்னொருத்தரு அய்யா சாமி... என்னோட கனராபேங்க் ஏடிஎம்ல பணம் எப்ப சாமி வரும்னு கேக்க...
கனரா பேங்க்காஆஆஆ.... அதுல பணம் வர்ற. வரைக்கும் நான் உயிரோடயே இருக்க மாட்டேன்னு கடவுளே அப்படியே மயங்கி பொத்துன்னு விழுந்துட்டாரு....
நவம்பர் 8 ம்தேதிக்கப்புறம் எந்த கனராபேங்க் ஏடிஎம்மும் வேலை செஞ்சி நான் பாக்கல.... நீங்க பாத்தீங்க...?
Demonetisation countdown to day 50. Normal Indian man with lord comedy viral in Face book.
60 words
500,1000 ரூபாய் செல்லாது என்ற பிரதமர் மோடி அறிவித்த பின்னர் வங்கி வாசல்களிலும், ஏடிஎம் வாசல்களிலும் மணிக்கணிக்கில் மக்கள் காத்திருக்கின்றனர். 50 நாட்கள் ஆகிவிட்டது. பல ஏடிஎம்கள் காட்சிப்பொருளாகவே இருக்கின்றன. இதை வைத்து மீம்ஸ்கள், கமெடிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.