என் பிரண்டப் போல யாரு மச்சான்...?
இரண்டு நண்பர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அப்போது அவர்களில் யார் புத்திசாலி என்ற வாக்குவாதம் உண்டாகிறது.
அவர்களுக்குள் ஒரு போட்டி நடத்தப் படுகிறது. யார் ஜெயித்தார்கள் என பார்ப்போமா....

சவாலே சமாளி....
ராமு: நான் தான் புத்திசாலி... என்னால் செய்ய முடிந்தவற்றை சொல்கிறேன், அதை உன்னாலும் செய்ய முடிந்தால் நீயும் புத்திசாலி என ஒத்துக் கொள்கிறேன்...
கோமு: சரி... சொல்

கோப்பையிலே என் குடியிருப்பு....
ராமு: என்னால் காபி கோப்பைக்குள் காபியை நிரப்ப முடியும். உன்னால் உலக கோப்பைக்குள் உலகத்தை நிரப்ப முடியுமா...?
கோமு: ...????

மொபைல் போன்....
ராமு : நான் உன் முகவரிக்கு எனது முகவரியை அனுப்புகிறேன்... நீ என் முகவரிக்கு உன் மொபைல் போனை அனுப்ப இயலுமா...?
கோமு : ...????

டைகர் பிஸ்கட்....
ராமு: கடைசிக் கேள்வி, நான் க்ரீம் பிஸ்கட்டை கிரீமோடு சாப்பிடுவேன், உன்னால் டைகர் பிஸ்கட்டை டைகரோடு சாப்பிட முடியுமா...?
கோமு :....???

நண்பேண்டா....
ராமு: நான் தான் புத்திசாலி என இப்போதாவது புரிந்ததா உனக்கு....
கோமு: என்ன ஒரு புத்திசாலித் தனம்... நீயெல்லாம் நல்லா வருவடா...நண்பேண்டா












Click it and Unblock the Notifications