அப்படீன்னா முதல்ல உன் புருஷனுக்குச் சொல்லிக் கொடு....!
சில நேரங்களில் கெட்டதிலும் ஏதாச்சும் நல்லது நடந்து விடும். இந்த விவசாயி மனைவிக்கும் அப்படித்தான் நடந்தது. நடந்ததைப் பாருங்களேன்....
எக்ஸ்கியூஸ்மி.. உள்ளே யார்...?
ஒரு இளைஞன் அந்த விவசாயி வீட்டுக் கதவைத் தட்டினான். உள்ளே விவசாயி இல்லை. அவரது மனைவிதான் வந்து கதவைத் திறந்தார்.
எப்படி வச்சுக்கனும்னு தெரியுமா...?
அவரிடம், வந்த இளைஞன், உங்களுக்கு எப்படி செக்ஸ் வச்சுக்கனும்னு தெரியுமா என்று கேட்டான்.
ஷட்டப் நான்சென்ஸ்.. !
அதைக்கேட்ட விவசாயி மனைவிக்கு கோபம் வந்து விட்டது. பதில் பேசாமல் கதவை மூடி விட்டு உள்ளே போய் விட்டார்.
மறுபடியும் கேட்கிறேன், சொல்லுங்க ப்ளீஸ்
அடுத்த நாளும் அதேபோல வந்து அந்த இளைஞன் கேட்டான். இப்போதும் கோபம் வந்து கதவை மூடி விட்டார் விவசாயி மனைவி. இப்படியே சில நாட்கள் தொடரவே தனது கணவரிடம் அதுகுறித்து முறையிட்டார்.
இன்னிக்கு வரட்டும், நான் பார்த்துக்கிறேன்
அடுத்த நாள் வேலைக்குப் போகாமல் வீட்டிலேயே இருந்தார் விவசாயி. இன்றும் இளைஞன் வந்தால் ஒரு வழி பண்ணி விட வேண்டியதுதான் என்று கோபத்துடன் காத்திருந்தார்.
தயவு செய்து சொல்லுங்களேன்...
அன்றும் வந்தான் இளைஞன். கதவுக்குப் பின்னால் அரிவாளுடன் காத்திருந்தார் விவசாயி. அவரது மனைவி கதவைத் திறந்தார். இப்போதும் அதே கேள்வி. அதைக் கேட்ட மனைவி, இந்த முறை, தெரியும் உள்ளே வா சொல்லித் தர்றேன் என்றார் ஹஸ்க்கியான குரலில்.
அப்படீன்னா முதல்ல உன் புருஷனுக்குச் சொல்லிக் கொடு....!
அதைக் கேட்ட இளைஞன் முகத்தில் சந்தோஷம்.. உடனே சொன்னான்.. ரொம்ப சந்தோஷம். அப்படீன்னா முதலில் உன் புருஷனுக்கு அதைச் சொல்லிக் கொடு. என் மனைவி இருக்கும் பக்கம் கூட இனி அவன் வரக் கூடாது. மறுபடியும் பார்த்தேன்.. கொண்டே புடுவேன்...