அன்பே, இன்று இரவு என்ன சமையல்..?
மனைவிக்கு காது கேட்கும் திறன் குறைந்து வருவதாக சந்தேகப் படுவதாக மருத்துவரை நாடினார் கணவர் ஒருவர்.
பின், மருத்துவரின் அறிவுரைப் படி மனைவியின் காது கேட்கும் திறனை பரிசோதிக்க ரகசியமாக முயற்சி மேற்கொண்டார் கணவர்.
சமையலறையில் மனைவி சமையல் செயவதைக் கண்ட அவர் அப்படி என்ன பண்ணினார். பாருங்களேன்....

40 அடி தூரத்தில்....
கிச்சனுக்கு வந்த கணவர் 40 அடி தூரத்தில் நின்று மனவியை அழைத்தார்...
கணவன் : அன்பே, இன்று இரவு என்ன சமையல்..?
மனைவி :....

30 அடி தூரத்தில்....
சிறிது நெருங்கி 30 அடி இடைவெளியில் நின்ற கணவர்....
கணவன் : அன்பே, இன்று இரவு என்ன சமையல்...?
மனைவி : .....

20 அடித் தூரத்தில்....
மீண்டும் நெருங்கி 20 அடி தூரத்தில் நின்றார் கணவர்....
கணவன் : அன்பே, இன்று இரவு என்ன சமையல்...?
மனைவி :.....

10 அடிதூரத்தில்...
10 அடி தூர இடைவெளிக்குச் சென்ற கணவர்...
கணவன் : அன்பே, இன்ரு இரவு என்ன சமையல்..?
மனைவி :....

அடக்கடவுளே.....
மனைவியின் தோளைப் பிடித்து திருப்பிய கணவன், அவள் முகத்தைப் பார்த்துக் கேட்டான்.
கணவன் : அன்பே, இன்று இரவு என்ன சமையல்..?

இப்பப் புரியுதா...?
மனைவி : அடக்கடவுளே, உங்களுக்கு காதுல விழலியா... இத்தோட 5 தடவை பிரியாணி, பிரியாணினு சொல்லிட்டேன்...
(இப்பப புரியுதா உண்மையிலேயே யார்கிட்ட பிராப்ளாம்னு....)












Click it and Unblock the Notifications