ஸ்கூல் திறக்க போறாங்க.. கிட்ஸ் லஞ்ச் பாக்ஸுக்கு என்ன செய்யலாம்.. சிறுகீரை சாதம் செய்வது எப்படி?
சென்னை: குழந்தைகளுக்கு அடுத்த வாரம் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் அவர்களுக்கு எந்த மாதிரியான உணவுகளை அளித்தால் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
பள்ளிக்கு அனுப்பும் தாய்மார்களுக்கு ஒரே கவலை தங்களது குழந்தை ஸ்நாக்ஸையும் மதிய உணவையும் மிச்சம் வைத்துவிடுகிறார்கள் என்பதுதான! என்னதான் ருசியாக செய்து கொடுத்தாலும் பாக்கெட் ஐட்டங்களின் மீதுள்ள நாட்டம் அவர்களுக்கு வீட்டு முறை உணவுகளில் வருவதில்லை.
இதற்குத்தான் எந்த உணவை எப்படி கொடுக்க வேண்டும் என்பதை தெரிந்து கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு புரதச் சத்து அவசியமாகும். எந்த கீரையாக இருந்தாலும் அதை நாம் வீட்டில் கொடுத்தால் சாப்பிட மாட்டார்கள்.

ஆனால் அவற்றை பள்ளிகளுக்கு கொடுத்தனுப்பினால், டீச்சருக்கு பயந்துதாவது சாப்பிட்டு வர வாய்ப்புள்ளது. சாம்பார், ரசம் என கொடுத்து அனுப்புவதை காட்டிலும் கீரைகள், காய்கறிகளை கொடுத்தனுப்பலாம். அந்த வகையில் சிறுகீரை சாதம் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சிறுகீரை கட்டு 1
வெங்காயம்- 2
காய்ந்த மிளகாய் - காரத்திற்கு ஏற்ப
பூண்டு 10 பற்கள்- இரண்டாக அல்லது 3ஆக வெட்டி கொள்ள வேண்டும்
கடுகு, பெருங்காயத்தூள்- தாளிக்க
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
எண்ணெய், உப்பு- தேவைக்கேற்ப
செய்முறை: கீரையை ஆய்ந்து வைத்துக் கொண்டு ரஃப்பாக கட் செய்து கொள்ள வேண்டும்.
எப்போதும் கீரையை அலசி விட்டுதான் கட் செய்ய வேண்டும். மண் நீங்கி நீர் தெளிவாகும் வரை அலசி வடித்துவிட்டு கட் செய்ய வேண்டும். கட் செய்துவிட்டு எப்போதும் கீரையை அலச வேண்டாம்.
ஒரு வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டதும் பெருங்காயத்தை போட்டு காய்ந்த மிளகாயை கிள்ளி போட வேண்டும்.
அது கருகாமல் வறுத்தெடுத்து உடனே வெங்காயத்தை போட்டு பிங்க் நிறத்தில் வரும் வரை வதக்கவும். பிறகு பூண்டு போட வேண்டும். அது வதங்கியதும் அலசி பொடியாக நறுக்கி வைத்த கீரையை போட வேண்டும்.

பின்னர் அடுப்பை லோ ஃபிளேமில் வைத்து கீரையை கை விடாமல் வதக்க வேண்டும். கீரையில் மஞ்சள் தூளை போட்டு வதக்கவும், கீரை வதங்கி சுருண்டதும் உப்பு சேர்க்க வேண்டும். பின்னர் தண்ணீர் தெளித்து தெளித்து கீரையை வேக வைக்க வேண்டும்.
கீரை வெந்ததும் அடுப்பை நிறுத்தி வைக்க வேண்டும்.
பின்னர் சாதத்தை குக்கரிலோ அல்லது வடித்தோ எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் சிறிது நெய் விட்டு ஆற வைக்க வேண்டும். பின்னர் தேவையான அளவு கீரையை போட்டு ஸ்பூன் மூலம் நன்கு பிசைய வேண்டும். பின்னர் அதை லஞ்ச் பாக்ஸில் கட்டி கொடுத்துவிடலாம்.
கீரையில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. இது குழந்தைகளுக்கு ஜீரண சக்தியை அதிகரிக்கும். மேலும் பூண்டு வாயு தொல்லையை போக்கும். வெங்காயம் உடலுக்கு குளிர்ச்சியை தரும்.
இந்த கீரை சாதத்தை கொடுப்பதால் பொரியல் கொடுக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. 20 நிமிடங்களில் இந்த ரெசிபியை செய்து முடித்துவிடலாம். நிச்சயம் இதை குழந்தைகள் வேண்டாம் என சொல்ல மாட்டார்கள்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications