குழந்தை நீதி கதைகள்: மரம் வெட்டியின் பேச்சை கேட்டு.. மோசம் போன சிங்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: Kids story in Tamil: ஹாய் குட்டிஸ், எப்படி இருக்கீங்க.. படிப்பில் கவனமாக இருக்கிறீர்களா, உங்களின் முதல் கடமை அதுதான் அதை சரியாக செய்துவிட்டால் நாளை நீங்க விரும்பியவாறு உங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும். சரி அட்வைஸ் பண்ணாம இப்போ கதையை சொல்றேன்.. படிக்கலாமா, வாங்க.

ஒரு பெரிய காட்டிற்கு பக்கத்திலே ஒரு கிராமம் இருந்து வந்ததது. அந்த கிராம மக்கள் தங்கள் உணவுக்கான தேவைகளை அருகில் இருந்த காட்டில் இருந்து எடுத்து தீர்த்து கொண்டார்கள். உதாரணமாக பழங்களை பறித்து கொள்ள, மரங்களை வெட்டி விறகுகளை விற்று தங்களது அன்றாட வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள்.

Kids stories kids story wild stories children stories tamil story child

மனிதர்கள் காட்டுக்குள் நடமாடுவது தெரிந்தும் விலங்குகளும் தங்களுடைய வாழ்க்கையை நேர்த்தியாக எந்த ஒரு சலனமும் இல்லாமல் வாழ்ந்து வந்தன. மக்கள் காட்டுக்குள் வந்தாலும் அவர்களை தாக்குவதில்லை. அதனால் மக்களும் விலங்குகளிடத்தில் எந்த அச்சமும் இல்லாமல் இருந்தார்கள். காட்டுக்குள் எப்போது வேண்டுமென்றாலும் போய் வந்தார்கள். விலங்குகளும் கிராமத்திற்குள் அவ்வவ்போது நடமாடும்.

அந்த கிராமத்தில் ஒரு ஏழை மரவெட்டி வசித்து வந்தான். அவனுக்கு ஒரு மகள் இருந்தாள். அவள் தனது தந்தையுடன் விறகுகளை எடுத்துவர உதவியாக இருப்பாள். மிகவும் அழகானவள் மற்றும் அன்பானவள். ஒருநாள் தந்தையுடன் காட்டில் இருந்து விறகு எடுத்து வர சென்றாள். அப்போது அந்த பக்கமாய் சென்ற சிங்கம் மரவெட்டியின் மகளை கவனித்தது.

Kids stories kids story wild stories children stories tamil story child

ஒரு நொடி நின்று அவளை பார்த்த சிங்கத்திற்கு அவளின் அழகின் மேல் ஆசை ஏற்பட, திருமணம் செய்துகொள்ள முடிவு செய்ததது. மறுநாளே மரவெட்டியின் வீட்டிற்கு சென்று உன் மகளை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன் என பெண் கேட்டது. பதறிப்போன மரவெட்டி, தன் பயத்தை வெளியில் காட்டிக்கொள்ளாமல் சிரித்து கொண்டே ஒரு காட்டின் அரசனே என் பெண்ணை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதை நினைத்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் எனக்கு ஒரு நிபந்தனை இருக்கிறது என்றான்.

ஆர்வம் அதிகமாகி, என்னவாக இருக்கும் என யோசித்துகொண்டே சிங்கம் மரவெட்டியை பார்க்க, சிங்கத்திடம் இருந்து தன் மகளை காப்பாற்ற ஒரு வேண்டுகோல் வைத்தான். அதாவது நீங்கள் ஏற்கனவே அரசராக இருக்கிறீர்கள், ஆகையால் உங்களுக்கு பயந்து தான் இங்கு அனைவரும் இருக்கிறார்கள். அதனால் உங்கள் தலையில் இருக்கும் இந்த படர்ந்த முடியை வெட்டி , பயங்கரமாக தெரியும் இந்த பற்கள் மற்றும் உங்கள் நகங்கள் என அவற்றையும் வெட்டி நேர்த்தியாக வந்தால் என் பெண்ணை மணமுடித்து தருகிறேன் என்றான்.

Kids stories kids story wild stories children stories tamil story child

சிங்கம் தான் விருப்பப்பட்ட பெண் கிடைக்க போகிறது என சந்தோஷத்தில் திரும்பி சென்று மரவெட்டி சொன்னது போலவே பார்ப்பதற்கு அழகாக இருக்கிறோம் என நினைத்து கொண்டு மறுநாள் மரவெட்டி வீட்டிற்கு வந்தது.

மரவெடியை அழைத்து நீ கேட்டது போலவே நான் அனைத்தையும் செய்துவிட்டேன். இப்போது உன் பெண்ணை திருமணம் முடித்து கொடு என்று கேட்க, பல்லில்லாத சிங்கத்தை பார்த்த மரவெட்டி சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தே விட்டான். புரியாமல் விழித்து கொண்டிருந்த சிங்கத்தை ஒரு கட்டையை கொண்டு அடித்தே துரத்தினான். உனக்கு என் மகள் வேணுமாடா என பயங்கரமாக அடித்து விரட்டினான்.

தன்னை அந்த மரவெட்டி ஏமாற்றியதை நினைத்து மனம் நொந்து அங்கிருந்து சிங்கம் கிளம்பியது.

ஆகையால் குழந்தைகளே நீங்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தால் உங்களுக்கு ஒத்துவராத சிலவற்றில் தலையிடாமல் இருப்பதே சால சிறந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+