குழந்தை நீதி கதைகள்: இப்படியும் மக்களா? எதார்த்தத்தை புரிந்து கொண்ட இளவரசன்..
சென்னை: Kids story in Tamil: ஹலோ சுட்டீஸ், எப்படி இருக்கீங்க. தன் மக்கள் சந்தோசமாக இருக்கிறார்கள் என நினைத்து கொண்டிருந்த இளவரசனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது போல ஒரு சம்பவம் நடந்தது. அது என்ன என்பதை இந்த கதையை படிச்சி தெரிஞ்சிக்கலாம். அதுக்கு முன்னாடி ஒன் இந்தியாவில் உங்க புகைப்படம் வரணுமா மறக்காம கீழே இருக்கும் தகவலை படித்து தெரிந்து கொண்டு அனுப்பலாம்.
அது ஒரு அழகான ராஜ்ஜியம். சுற்றிலும் கடல், மலைகள் சூழ்ந்து பார்ப்பதற்கே பலருக்கும் பிடிக்கும். அந்த ராஜ்ஜியத்தில் அலெக்ஸாண்டர் என்ற இளவரசன் இருந்தான். அவனுக்கு தெரிந்தது எல்லாம், மக்கள் சந்தோசமாக இருக்கிறார்கள். தந்தையான அரசர் அவர்களை நன்றாக பார்த்து கொள்கிறார். அவன் வெளியில் சென்றால் மக்கள் ஆரவாரமாய் இளவரசனை வரவேற்பதும், அவர்கள் முகத்தில் தெரியும் மகிழ்ச்சியும் இளவரசனுக்கு மேலும் சந்தோஷங்களை அள்ளி கொடுத்தது.

எப்போதுமே சிப்பாய்களுடன் வெளியில் செல்லும் இளவரசன் அன்று தனியாக செல்ல முடிவு செய்து கிளம்பினான். வீட்டில் யாருடனும் சொல்லாமல் தனது குதிரையில் அரண்மனையில் இருந்து புறப்பட்டான். போகும் வழியெல்லாம் மக்கள் இளவரசனுக்கு பூக்கள் தூவி வரவேற்றார்கள். அவனுக்கு அவன் நாட்டின் மீதும், மக்கள் மீதும் கர்வம் ஏற்பட்டது. தனது நாடு இருக்கும் செழிப்பை கண்டு வியந்து சென்று கொண்டே இருந்த அவன் பாதை மாறி ஒரு காட்டுக்குள் சிக்கி கொண்டான்.
ஒரு அடர்ந்த காட்டுக்குள் எந்தவித சத்தமும் இல்லாமல், திசை தெரியாமல் திகைப்போடு நின்றான். யாரோ ஹம் பண்ணுவது போல அவன் காதுகளில் கேட்க, குரல் வந்த திசையில் சென்றான். தூரத்தில் ஒரு பழைய அரண்மனை இருந்ததை பார்த்தான். மெதுவாக அங்கு செல்ல, அந்த மெல்லிய குரல் ஓசை இன்னும் சத்தமாக கேட்டது. அருகில் சென்று பார்த்தால் அங்கு ஒரு பெண் இருந்தாள்.
அவள், அந்நாட்டின் இளவரசி என்று சொல்ல, மக்கள் இல்லை, ஒரு சிப்பாய் இல்லை, அரண்மனையில் யாருமே இல்லாமல் தனியாக இருக்கிறாய் என்று இளவரசன் கேட்டான். இளவரசி, அது என் மக்கள் சந்தோஷமாக தான் இருக்கிறார்கள் என நான் மெத்தனமாக இருந்தேன், ஆனால் கொஞ்ச நாட்களில் மக்கள் பஞ்சம் வந்து, கஷ்டத்தில் நாட்டை விட்டு குடிபெயரும் போதுதான் உண்மையை புரிந்து கொண்டேன் என்று சொல்ல, அவளையும் அழைத்து கொண்டு தனது நாட்டுக்கு திரும்பினான் இளவரசன்.
போகும் வழியெல்லாம் முற்செடிகளாய் இருக்க, அவனது உடை கிழிந்து பாழாய் போனது. நாட்டிற்கு திரும்பும்போது ராஜ்ஜியத்தின் இன்னொரு பகுதி வழியாக செல்ல நேர்ந்தது. அவன் பார்த்த ராஜ்ஜியத்தில் இருந்த மக்களை விட இவர்கள் ஏழ்மையாக தெரிந்தார்கள். அந்த மக்கள் வாழும் இடம் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இளவரசனை யாருக்கும் அடையாளமும் தெரியவில்லை. முக்கியமாக அவன் ராஜ உடைகள் கிழிந்து போனதால் அவன் உருவத்தை வைத்தும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இளவரசன் வெகு தொலைவில் பயணித்து வந்ததால் சோர்வாகவும் இருந்தான். அவனை பார்த்த மக்கள், பரிதாபப்பட்டு உணவளித்து அவனுடன் நேரத்தை செலவு செய்தார்கள். அப்போதுதான் இப்படியும் மக்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கு ராஜ்ஜியத்தில் சில பிரச்சனைகள் இருப்பதையும் தெரிந்து கொண்டான். 2 நாட்கள் அந்த மக்களுடன் இருந்தான். மறுபடியும் ராஜ்ஜியத்திற்கு கிளம்பினான். அவன் உடைகள் கிழிந்தாலும் மக்களுக்கு அவன் யாரென்று தெரிந்ததால் அவனை உற்சாகமாக வரவேற்றார்கள்.

அப்போதுதான் அவனுக்கு புரிந்தது, மக்களை நாம் சரியாக சென்றைடையவில்லை என்று. அவன் அழைத்து வந்த இளவரசியுடன் இளவரசனுக்கு திருமண ஏற்பாடுகள் செய்தனர். இளவரசி தான் செய்த தவறை இளவரசனுக்கு எடுத்து சொன்னாள். அவனுக்கு உதவிய அந்த மக்களுடன் தனது திருமணம் நடக்க முடிவு செய்தான்.
அவர்கள் முன்னிலையில் கோலாகலமாய் திருமணத்தை செய்தான். திருமணம் முடிந்த கையோடு மக்களுக்கு அறிவிப்பையும் கொடுத்தான். இனிமேல் ராஜ்ஜியத்தில் இருக்கும் ஒவ்வொரு பகுதி மக்களையும் நேரில் வந்து பார்த்து 2 நாட்கள் தங்கி அவர்களின் தேவையை பூர்த்தி செய்வேன் என்றான். சொன்னதை தவறாமல் செய்தான். முன்பை விட ராஜ்ஜியம் இன்னும் அழகாக மாறியது. இளவரசியுடன் சந்தோஷமாக வாழ்ந்தான் இளவரசன் அலெக்ஸாண்டர்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications