Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குழந்தை நீதி கதைகள்: நீ சிரிக்காத ஆத்தா.. சோகமான இளவரசியை சிரிக்க வைத்தது யார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: Kids story in Tamil: ஹாய் சுட்டிஸ், எப்படி இருக்கீங்க. வீகென்ட் வந்தாச்சு. யாருக்கெல்லாம் தேர்வுகள் எப்போ எப்போன்னு அட்டவணை வந்துருக்கு. படிப்புக்கு இடையில் கொஞ்சம் ஓய்வும் எடுத்துக்கோங்க. சிரிச்ச முகமா இருங்க. அப்படியே நம்ம சிரிக்காத இளவரசியோட கதையையும் படிச்சி சிரிச்சிக்கோங்க.

அந்த அழகான ராஜ்ஜியத்தில் ஒரு இளவரசி இருந்தார். அவள் எப்போதும் சோகமாகவே இருப்பாள். அவள் சிரித்து இதுவரை யாரும் பார்த்ததே இல்லை. சிறு வயதில் இருந்தே அவள் அப்படித்தான் இருந்தாள். இளவரசியை நினைத்து ராஜாவிற்கு எப்போதுமே ஒரு கவலை இருந்து கொண்டே இருந்தது. அவள் எப்போதாவது சிரிக்க மாட்டாளா? அதை நாம் கேட்டுவிட முடியாத என்று அவர் வருத்தத்தில் இருந்தார்.

Short story for kids in Tamil : The sad princess

அவளுக்கு திருமண வயது நெருங்கியது. அரசர் சுயம்வாரத்திற்கு தயார் செய்ய முடிவு செய்தார். அதில் முக்கியமான கண்டிஷன் போட்டார். இளவரசியை யார் சிரிக்க வைக்கிறார்களோ அவர்களுக்கு தனது பெண்ணை திருமணம் செய்து வைப்பதாக குறிப்பிட்டார். பலர் பல ராஜ்யங்களில் இருந்து சுயம்வரத்திற்கு கலந்து கொள்ள வந்தார்கள்.

பலரும் பலவிதமாக நடித்து சிரிக்க வைக்க முயற்சி செய்தார்கள். ஒவ்வொவருவராக காமெடி கூற ஆரம்பித்தார்கள். ஒருவர், கீழே விழுந்தாலும் காயம் படாமல் இருப்பது எது? என்று கேட்க அவரே மழை என்றும் விடை கூறினார் யாருமே சிரிக்கவில்லை. இன்னொருவர் 'ஒரு பச்சை கற்களை கடலில் வீசி இருந்தால் அது என்னவாகும்? என்று கேட்க ஈரமாகும் என்று சொல்ல இளவரசி சிரிக்கவில்லை.

பல் வலிக்க முக்கியமான காரணம் என்ன? ஒருவர் கேட்க பற்கள் தான் என்று பதிலும் சொன்னார். ஆனால் இளவரசி அதற்காக சிரிக்கவில்லை. இப்படி ஓவ்வொருவரும் செய்யும் காமெடி அவளுக்கு பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை. அவள் சோகமாக ஜன்னல் வழியாக வெளியே பார்த்து கொண்டிருந்தாள். அரசருக்கு மனது வேதனை அடைய ஆரம்பித்தது.

திடீரென யாரோ சத்தமாக சிரிப்பதை கேட்டார். யாரடா இது இவ்வளவு கேவலமான ஒரு சிரிப்பு' ஹா ஹா ஹீ ஹீ ஹூ ஹூ ' இந்த சத்தம் கேட்டதும் அரசருக்கு அதிர்ச்சியாக இருந்தது. இதுக்கு நீ சிரிக்காமலே இருந்திருக்கலாம் என மனதில் நினைத்து கொண்டார்.

Short story for kids in Tamil : The sad princess

எதனால் தன மகள் சிரித்தாள் என்று கேட்க வெளிய ஒருவர் தனது கழுதையை இழுக்க அது முரண்டு பிடிக்க அவன் கழுதையின் காலில் விழுந்து கெஞ்சுகிறான் அதை பார்த்ததும் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை எண்று கூறினாள் இளவரசி. எப்படி இருந்தாலும் தன் மகளை சிரிக்க வைத்தது அவன்தான் என்பதால் அவனுக்கே மகளை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்.

எதனால் தன மகள் சிரித்தாள் என்று கேட்க வெளிய ஒருவர் தனது கழுதையை இழுக்க அது முரண்டு பிடிக்க அவன் கழுதையின் காலில் விழுந்து கெஞ்சுகிறான் அதை பார்த்ததும் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை எண்று கூறினாள் இளவரசி. எப்படி இருந்தாலும் தன் மகளை சிரிக்க வைத்தது அவன்தான் என்பதால் அவனுக்கே மகளை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+