தை பிறந்தா வழி பிறக்குமா?.. 30 தை தாண்டியாச்சு.. எனக்கு முட்டுசந்து போல.. வழியே கிடைக்கல!
சென்னை: போகி பண்டிகையை மீம்ஸ் போட்டு சமூகவலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஒரு வழியாகப் போகி வந்து விட்டது, அடுத்து பொங்கல் தான் என கொண்டாட்ட மூடுக்கு தயாராகி வருபவர்களின் கையில் விளக்குமாறையும், ஒட்டடைக் கம்பையும் கொடுத்து, 'இன்னும் க்ளீன் பண்ணி முடிக்கல கண்ணா' என பல வீடுகளில் வேலை வாங்கி வருகின்றனர் போலும். அதனால்தான் மீம்ஸ்களிலும் அதே விளக்குமாறையும், ஒட்டடைக் கம்பையும் கையில் பிடித்தவாறு சிரித்து வருகின்றனர் நம் நெட்டிசன்கள்.
இன்று போகிப் பண்டிகை என்பதால், பல வீடுகளில் பழைய பொருட்களை எரித்து, அதிகாலையிலேயே கொண்டாடி விட்டனர். ஆனாலும், நம் நெட்டிசன்கள் மீம்ஸ்களில் இன்னமும் போகியைக் கொண்டாடி வருகின்றனர். 'முதல்ல உன் செல்போனை தீயில் போட்டு எரி' என்பது மாதிரியான யதார்த்தமான மீம்ஸ்கள் வேற லெவலில் உள்ளன.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






















Click it and Unblock the Notifications