மஞ்சள் அலர்ட்.. ஆரஞ்சு அலர்ட்.. ரெட் அலர்ட்.. என்னங்க கலர்கலரா பயமுறுத்துறீங்க!
சென்னை : சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், சமூகவலைதளப் பக்கங்களிலும் மழை, வெள்ளம் பற்றிய மீம்ஸ்களைப் பகிரத் தொடங்கி விட்டனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், இன்று முதல் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று மஞ்சள் அலர்ட், நாளை ஆரஞ்ச் அலர்ட், நாளை மறுதினம் ரெட் அலர்ட் மற்றும் வரும் வியாழக்கிழமை மீண்டும் மஞ்சள் அலர்ட் என கலர்கலரான அலர்ட்டுகளும் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால் ஊடகங்கள் மற்றும் சமூகவலைதளப் பக்கங்களில் மழை பற்றிய செய்திகள்தான் ஆக்கிரமித்துள்ளன. கடந்தாண்டைப் போல் தற்போதும் சென்னையில் வெள்ளம் ஏற்படுமோ என்ற பயத்தில், இப்போதே மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் துவங்கி விட்டனர். பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில்தான் சென்னை மக்களுக்கு மழை, வெள்ளம் பற்றிய பயம் அதிகமாக இருக்கும். ஆனால் இம்முறை அக்டோபரிலேயே மழை தனது வேலையைக் காட்ட ஆரம்பித்துவிட்டது. பிறகென்ன, ஒருபுறம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டே, வழக்கம் போல் மழை மற்றும் வெள்ளம் பற்றிய மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தை கலகலக்க வைத்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...



















Click it and Unblock the Notifications