பெய்யுற மழைய பார்த்தா.. இந்த பெங்கல் புயல் நமக்கு பொங்கல் வைக்காம போகாது போலயே!
சென்னை : பெங்கல் புயலையும் தங்கள் ஸ்டைலில் பொங்கல், பெண்கள் என மீம்ஸ் போட்டுக் கலாய்த்து வருகின்றனர் நம் நெட்டிசன்கள்.
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதி மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தொடர்ந்து வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுப்பெற உள்ளது.
இந்த புயலுக்கு பெங்கல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. முதலில் இந்தப் புயல் எங்கு கரையைக் கடக்கும் என கணிக்க முடியவில்லை என வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அது எங்கு, எப்படிக் கரையைக் கடக்கும் என அறிவித்துள்ளனர். இந்தப் புயலால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் அலர்ட் மழைக்காகக் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த பெங்கல் புயல், கடந்த மாதம் வந்த புயல் மாதிரி சத்தமில்லாமல் தமிழகத்தைக் கடந்து விடுமா அல்லது நமக்கு பொங்கல் வைத்து விட்டுச் செல்லுமா என மக்கள் செய்தி ஊடகங்களின் அப்டேட்டுகளைக் கவனித்துக் கொண்டிருக்க, வழக்கம் போல் நம் குறும்புக்கார நெட்டிசன்கள் இந்தப் புயலையும் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
பெரும்பாலும் புயல்களுக்கு வெவ்வேறு நாட்டினரே பெயர் வைப்பதால், அவை வாயில் நுழைய முடியாதவைகளாகத்தான் உள்ளன. அப்படித்தான் இந்த பெங்களும். எனவே இதனையும் பெண்கள், பொங்கல் என மீம்ஸ்களில் கலாய்த்துள்ளனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில பெங்கல் புயல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




















Click it and Unblock the Notifications