பிரபலங்கள் அதிகமா இருக்க ஊர்னு நினைச்சீங்களா.. இது ப்ராப்ளங்கள் அதிகமா இருக்கற ஊரு!
சென்னை : சென்னையில் விட்டு விட்டு பெய்து வரும் மழையை வைத்து, இப்போதே மீம்ஸ் மழை பொழிந்து வடகிழக்கு பருவமழையை வரவேற்கத் தொடங்கி விட்டனர் நெட்டிசன்கள்.
கடந்த மாதம் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட போது, சென்னை மக்கள் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பார்த்தபோதே மக்கள் எப்படி புதிய இயல்புநிலைக்கு மாறி வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளத் தயாராகி விட்டனர் என்பது அனைவருக்கும் புரிந்து விட்டது. இது மழைக்கும் புரிந்தது விட்டதாலோ என்னவோ, அந்த மழையும் சொல்லாமல் கொள்ளாமல் ஆந்திரா பக்கம் நகர்ந்து விட்டது.

ஆனால் இப்படி ஒவ்வொரு முறையும் மழை ஏமாற்றாது என்பது கடந்த வடகிழக்கு பருவமழை நமக்குக் கற்றுத் தந்த பாடம். அதனால்தான் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்து விட்ட நிலையில், மக்கள் புதிய இயல்புநிலைக்கு மாறத் தொடங்கி விட்டனர். இது சமூகவலைதளப் பக்கங்களில் அவர்கள் பகிரும் மழை மீம்ஸ்களைப் பார்த்தாலே நன்றாகப் புரிகிறது.
அதிலும், "யப்பா டேய்.. ரெண்டுநாள் மழை தண்ணி தானேனு அசால்டா நினைச்சு.. ரோட்ல வண்டியை விட்றாதீங்க!" என்பது மாதிரியான மீம்ஸ்கள், எச்சரிக்கைப் பதிவைக்கூட எப்படியெல்லாம் நகைச்சுவையாகக் கூறலாம் என்பதாக இருக்கிறது.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மழை மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






















Click it and Unblock the Notifications