'ஓட்டு மெஷினைக் கதற விடுவீங்கன்னு பார்த்தா'... சென்னைவாசிகளைக் கிண்டலடிக்கும் நெட்டிசென்கள்
சென்னை: நேற்று நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சென்னையின் ஒட்டுமொத்த வாக்குப்பதிவும் 57% கூடத் தாண்டவில்லை.
அதே நேரம் மற்ற மாவட்டங்களில் 60-85% வரையிலான வாக்குகள் பதிவாகியுள்ளன. கனமழை பெய்த தென்மாவட்டங்களில் கூட வாக்கு சதவீதம் இந்தளவு குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது சென்னையின் வாக்கு சதவீதத்தை வைத்து நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். அதிலிருந்து ஒருசில மீம்ஸ்களை இங்கே பார்க்கலாம்.

டிவி ஷோ
டிவி ஷோவுக்கு காட்டும் ஆர்வத்தைக் கூட சென்னை மக்கள் சட்டமன்றத் தேர்தலில் காட்டவில்லை என்பதை சுட்டிகாட்டி உள்ளனர்.

வெளியூர்
வெளியூர் மக்கள் தங்கள் பணம், நேரம் ஆகியவற்றை செலவு செய்து சென்று ஓட்டுப் போடுகின்றனர். ஆனால் சென்னைவாசிகள் இங்கிருந்து கொண்டே ஓட்டுப் போட முன்வரவில்லை என்பதைக் கூறியுள்ளனர்.

பீச், தியேட்டர்
பீச், தியேட்டர் போய் நேரத்தை செலவு பண்ற நீங்க ஒரு 5 நிமிஷம் ஒதுக்கி ஓட்டுப் போடவில்லையே என்று கேட்டுள்ளனர்.

மானாட மயிலாட
மானாட மயிலாடவுக்கு இங்க இருந்த நீங்க ஓட்டுப் போடறப்ப வெளியூர் போய்ட்டீங்களே?

மெஷின் கதறளவுக்கு
மெஷின் கதறளவுக்கு ஓட்டுப் போடுவீங்கன்னு பார்த்தா இப்படிப் பண்ணிட்டீங்களே பாஸ்.

மற்ற மாவட்டத்துல
சென்னை மக்களோட வாக்குப்பதிவப் பார்த்து மற்ற மாவட்ட மக்கள் இப்படித்தான் சிரிக்கிறாங்களாம்...

சூப்பர் சிங்கர்
சூப்பர் சிங்கருக்கு வோட்டுப் போட்ட நீங்க எலெக்ஷனுக்கு வோட்டுப் போடலையே.

மழை நேரத்தில
2016 எலெக்ஷன்ல ஒரு புதிய வரலாற்றை உருவாக்குவோம்னு வெள்ளம் வந்தப்ப சொன்னீங்களே?

அரசாங்கத்தை
அரசாங்கத்தை கொறை சொல்லத் தெரிஞ்ச உங்களுக்கு ஓட்டுப் போடணும்னு தெரியலல?

சென்னை
வாலு படத்தில் சிம்பு, சந்தானம் வசனத்தை வைத்துக் கலாய்த்துள்ளனர்.
இதுபோல சென்னை வாக்குப்பதிவை வைத்து பல்வேறு மீம்ஸ்களை நெட்டிசன்கள் விதவிதமாக உருவாக்கி கலாய்த்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications