மலையோரம் வீசும் காற்று.. மனதோடு பாடும் பாட்டு.. ‘கேக்’கு தா.. ‘கேக்’கு தா!
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, வித்தியாசமாக மீம்ஸ் போட்டு கேக் கேட்டு வருகின்றனர் நம் நெட்டிசன்கள்.
சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வாழ்த்துக்களோடு, ஜாடை மாடையாக நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து டீசண்டாக கேக் கேட்டு வருகின்றனர் நம் புத்திசாலி நெட்டிசன்கள்.

ரம்ஜானுக்கு பிரியாணி கேட்பதும், கிறிஸ்துமஸுக்கு கேக் கேட்பதும் நமக்கு வாடிக்கையான ஒன்றுதான். பாக்கெட்டில் எவ்வளவுதான் பணம் இருந்தாலும், அதை நம் சொந்தக் காசில் வாங்கிச் சாப்பிடாமல், நம் நண்பர்கள் வாங்கித் தருவதில் இருக்கும் சுவையே தனி.

கொரோனாவால் இடையில் நமது இரண்டு வருட கொண்டாட்டங்கள் தடைபட்டுவிட, இப்போது அதற்கெல்லாம் சேர்த்து வட்டியும், முதலுமாக நண்பர்களிடம் ட்ரீட் வாங்கியே ஆவது என்ற சபதத்துடன் இருக்கிறார்கள் போலும் நெட்டிசன்கள். வழக்கம் போல, தங்களது பாணியில் கிறிஸ்துமஸ் நாளான இன்று, மீம்ஸ் போட்டு, 'கேக்'குதா.. 'கேக்'குதா'.. என செல்லமாக நண்பர்களுக்கு அன்புத்தொல்லை கொடுத்து வருகின்றனர்.

அதிலும் தாராள மனதாக, புத்தாண்டிற்கும், கிறிஸ்துமஸிற்கும் தனித்தனியே டிரீட் வேண்டாம் என்ற அவர்களது தாராள மனப்பான்மையை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.

இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான கிறிஸ்துமஸ் மீம்ஸ்கள் உங்களுக்காக...















Click it and Unblock the Notifications