கேரள தலைமைச் செயலகத்தில் பயங்கர மோதல்: காரணம் சாண்டி, சரிதா மீம்ஸ் பிளக்ஸ் போர்டுகள்
திருவனந்தபுரம்: கேரள தலைமைச் செயலகம் முன்பு முதல்வர் உம்மன் சாண்டியையும், தொழில் அதிபர் சரிதா நாயரையும் கிண்டல் செய்து வைக்கப்பட்ட பிளக்ஸ் போர்டுகளால் ஐக்கிய ஜனநாயக முன்னணியினருக்கும், இடது ஜனநாயக முன்னணியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
சோலார் பேனல் மோசடி வழக்கின் முக்கிய குற்றவாளியான தொழில் அதிபர் சரிதா நாயர் முதல்வர் உம்மன் சாண்டிக்கு ரூ.1.90 கோடி லஞ்சம் அளித்ததாக தெரிவித்துள்ளார். மேலும் அரசியல் தலைவர்கள் சிலர் தன்னை உடல் மற்றும் மன ரீதியாக பயன்படுத்திக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

அதற்கான ஆதாரங்களை அவர் மோசடி வழக்கு குறித்து விசாரிக்கும் நீதிபதி சிவராஜன் கமிஷன் முன்பு அளித்துள்ளார். இந்நிலையில் கேரள தலைமைச் செயலகம் முன்பு சாண்டியும், சரிதாவும் ஜோடி போட்டு இருப்பது போன்ற பிளக்ஸ் போர்டுகளை இடது ஜனநாயக முன்னணி ஆதரவு தொழிலாளர் அமைப்புகள் வைத்தன.
மேலும் மலையாள படம் ஒன்றின் போஸ்டர் போன்றே சாண்டி, சரிதாவின் புகைப்படங்களை வைத்து மீம்ஸ் போஸ்டரும் வைத்திருந்தனர். இதை பார்த்த ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆதரவு அமைப்பினர் இடது ஜனநாயக முன்னணி ஆதரவு தொழிலாளர் அமைப்பினருடன் மோதினர்.
போலீசார் வந்து அவர்களை விலக்கிவிட்டதுடன் அனைத்து பிளக்ஸ் போர்டுகளையும் அகற்றினர்.
இதற்கிடையே தனது பெயரை லட்சுமி நாயர் என்று மாற்றி 2013ம் ஆண்டு கெசட்டில் பதிவு செய்துவிட்டதாக சரிதா நாயர் தெரிவித்துள்ளார். மக்கள் யாரும் தன்னை அடையாளம் காணக் கூடாது என்பதற்காக அவர் பெயர் மாற்றம் செய்ததாக கூறப்படுகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications