என்னடி பவுலிங் இது? "க்ளவுன்" ராகுல்.. இந்திய அணியை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்! டிரெண்டிங் மீம்ஸ்
சிட்னி: இங்கிலாந்துக்கு எதிரான டி 20 உலகக் கோப்பை செமி பைனல் போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்து உள்ளது.
இந்தியாவிற்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் இறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் இருந்தே நிதானமாக ஆடியது. கடைசியில் பாண்டியாவின் 63 ரன்கள் அதிரடியால் இந்திய அணி 168 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி அதிரடியாக ஆடி வெறும் 16 ஓவரில் 170 ரன்கள் எடுத்து வென்றது. இந்தியாவின் இந்த தோல்வியை வைத்து நெட்டிசன்கள் பலர் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
பெஞ்சில் டிகே.. ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு! டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் இந்தியா பேட்டிங்
நாக் அவுட்
இந்திய அணி தொடர்ந்து நாக் அவுட் போட்டிகளில் தோல்வி அடைந்து வருகிறது. 2019 உலகக் கோப்பை 50 ஓவர் போட்டியிலும் இப்படித்தான் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்த முறையும் மோசமாக ஆடி தோல்வி அடைந்து உள்ளது. இந்திய அணிக்கு சாபம் போல இப்படி நாக் அவுட் போட்டிகளில் மோசமாக ஆடி தோல்வி அடைகிறது.
பவுலிங்
இந்திய அணியின் பவுலிங் இன்று மிக மோசமாக இருந்தது. இங்கிலாந்து அணி ஸ்லோ பந்துகளை போட்டு இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்தது. ஆனால் இந்திய அணியின் பலம் ஸ்விங்தான். அதை பின்பற்றாமல் இந்திய அணியும் ஸ்லோ பால் போட முயன்றது. ஆனால் இங்கிலாந்து அணியிடம் இந்த பவுலிங் எடுபடவில்லை.
பவர் பிளே
இந்திய அணி பவர் பிளேவில் மிக மோசமாக திணறியது. இந்தியா பவர்பிளேவில் 33 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆனால் இங்கிலாந்து 66 ரன்கள் எடுத்து அசத்தியது. பவர் பிளேவில் தொடக்கத்தில் இருந்தே இந்திய அணி ரன்களை வாரி வழங்கியது. இதை வைத்து நெட்டிசன்கள் பலர் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
பைனல்
இந்தியா மீண்டும் ஒருமுறை பைனல் செல்லும் வாய்ப்பை இழந்து உள்ளது. கடந்த 2019 உலகக் கோப்பை 50 ஓவர் தொடரில் இந்தியா மிக சிறப்பாக ஆடி வந்தது. ஆனால் செமி பைனலில் சொதப்பி தோல்வி அடைந்தது. இந்த முறையும் குழு போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக ஆடியது. கடைசியில் செமி பைனலில் இப்போது சொதப்பி உள்ளது.
பாகிஸ்தான்
இந்தியா பாகிஸ்தான் இடையில் பைனல் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடக்கும் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் தற்போது இங்கிலாந்து அணி வென்றுள்ளது. இதன் மூலம் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் பைனலில் மோதும். இதை வைத்து நெட்டிசன்கள் பலர் இந்திய அணியை கடுமையாக கிண்டல் செய்து வருகின்றனர்.
கேப்டன்
இன்று ரோஹித் சர்மாவின் கேப்டன்சியும் மோசமாக இருந்தது. இந்திய பவுலர்கள் விக்கெட் எடுக்கவில்லை என்றதும் சரியாக பவுலர்களை ரொட்டேட் செய்து இருக்க வேண்டும். அதேபோல் அவரின் பீல்டிங் நிற்க வைத்த முறையும் மோசமாக இருந்தது. இதை நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சனம் செய்து மீம்ஸ் போட்டு வருகிறார்கள்.
கே எல் ராகுல்
வங்கதேசம் போன்ற சிறிய அணிகளுடன் சிறப்பாக ஆடிய கே. எல் ராகுல் இன்று வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்த தொடர் முழுக்கவே பெரிய அணிகளுடன் அவர் மோசமாக சொதப்பினார். ஓப்பனர் என்று கூறி அவர் எல்லோரையும் ஏமாற்றி வருகிறார் என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இதை வைத்தும் நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.