அதென்ன ஸ்கூல், காலேஜுக்கு மட்டும் லீவு.. அப்போ ஆபிஸ் போற நாங்கலாம் பாவம் இல்லையா?
சென்னை : மழை, குளிர், பள்ளிகள் விடுமுறை என வழக்கம் போல் மழை ஸ்பெஷல் மீம்ஸ்களால் இணையத்தை குளிர வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
பெங்கல் புயலால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வரும் நிலையில், இன்னமும் பல மாவட்டங்களில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தாலும், ஏற்கனவே திங்கட்கிழமை நாளை அலுவலகத்திற்குச் செல்ல வேண்டுமே என்ற கவலையில் இருக்கும் பெரியவர்கள், 'அப்போ நாங்களாம் பாவம் இல்லையா? நாங்க மழைல நனைஞ்சா பரவாயில்லையா?' என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர்.
அதோடு, மழை விட்டாலும் இன்னமும் குளிர் விடவில்லை என, "முன்னெல்லாம் குளிக்கத்தான் சுடுதண்ணீ போடுவோம்.. இப்போ கை கழுவவே சுடுதண்ணி போட வேண்டியதா இருக்கே" என்றும் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




















Click it and Unblock the Notifications