புயலுக்கு பெங்கலுக்கு பதிலா ஆண்கள்னு பேர் வச்சிருக்கலாம்.. அப்போவாச்சும் இரக்கம் காட்டியிருக்கும்!
சென்னை : பெங்கல் புயலால் சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகள் குளிர் மற்றும் மழையால் குளிர்ந்து கிடக்க, சமூகவலைதளங்களும் மீம்ஸ்களால் குளிர்ந்து கிடக்கின்றன.
பெங்கல் புயல் குறித்த அப்டேட்டுகள்தான் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன. எது ஊடகங்களில் அதிகம் பேசப்படுகிறதோ அதுதானே நம் மீமர்களுக்கும் பரபரப்பான கண்டெண்ட்டாக இருக்கும். அதனால் சமூகவலைதளங்களிலும் பெங்கல், மழை, புயல், வெள்ளம் என இந்த கான்செப்ட்டுகளில்தான் அதிகம் மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன.
ஊட்டி அல்ல இமாச்சலப் பிரதேசத்துக்கு இணையாகக் குளிர்ந்துபோய்க் கிடக்கிறது சென்னை. இதை வைத்து, 'இந்த மழைக்கே மப்ளர் தேடுறீங்களே.. நமக்கெல்லாம் லடாக் பைக் டூர் ஆசையெல்லாம் தேவையா கோபி?' என்றும், 'புயலுக்கு பெங்கலுக்கு பதிலா ஆண்கள்னு பேர் வச்சிருக்கலாம்.. அப்போவாச்சும் இரக்கம் காட்டியிருக்கும்' விதவிதமாக பெங்கலைக் கலாய்த்து மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான பெங்கல் ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...


















Click it and Unblock the Notifications