தீபாவளிக்கு பட்டுசேலை வாங்கறதா.. இல்ல.. வெள்ளத்துக்கு படகு வாங்கறதானு யோசிச்சுட்டு இருக்காங்க கோபி!
சென்னை : தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரிரு வாரங்களே உள்ள நிலையில், இப்போதே சமூகவலைதளங்களில் தீபாவளி மீம்ஸ்களைப் பகிர்ந்து கொண்டாட்டத்தை ஆரம்பித்து விட்டனர் நெட்டிசன்கள்.
தீபாவளி வருகிறதென்றாலே மக்கள் கொண்டாட்ட மோடுக்கு மாறி விடுவார்கள். போனஸ் எதிர்பார்ப்பு, புதுத்துணி எடுப்பது, பலகாரம் செய்வது, பட்டாசு வாங்குவது என தீபாவளிக்கு சில வாரங்களுக்கு முன்பே தீபாவளிக்கான திட்டமிடல்களை ஆரம்பித்து விடுவார்கள். அதிலும் இந்த முறை தீபாவளி அக்டோபர் மாதக் கடைசியில் வர, இந்த மாதம் சம்பளம் வாங்கியதுமே தீபாவளிக்கான செலவுகளை செய்து விட்டால், மாதக்கடைசியில் செலவு கையைக் கடிக்காது என முன்யோசனையில் செயல்பட்டு வருகின்றனர்.
ஆனால் இந்த முறை வடகிழக்கு பருவமழை இந்த மாத கடைசியில் துவங்கும் எனக் கூறப்படுவதால், வழக்கம் போல் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க முடியுமா? என்ற கவலையோடு, பட்டுப்புடவை வாங்குவதா இல்லை வெள்ளம் வந்தால் படகு வாங்குவதா என்ற சிந்தனையிலும் மக்கள் இருப்பதாக மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள்.
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மழை அளவு அதிகமாக இருக்கலாம், வெள்ளம் வரலாம் என ஏற்கனவே சமூகவலைதளப் பக்கங்களில் பலர் மைக்கை மாட்டிக் கொண்டு மக்களைப் பயமுறுத்திக் கொண்டிருக்க, இந்த மீம்ஸ்கள் சிரிப்பை வரவழைத்தாலும், 'ஒருவேளை தேவைப்படுமோ?' எனவும் யோசிக்க வைக்கின்றன.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில தீபாவளி ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






















Click it and Unblock the Notifications