படகில் பசுவை கூட்டிச் சென்றால் துப்பாக்கி சூட்டிலிருந்து மீனவர்கள் தப்பிக்கலாம்-நெட்டிசன்கள் ஐடியா
தமிழக மீனவர் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து மக்கள் தெரிவிக்கும் கருத்துக்களை பாருங்கள்.
சென்னை: மீனவர் பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகள் காட்டும் மெத்தன போக்கை கண்டித்து, சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள் உலா வருகின்றன.
சமூக வலைத்தளங்கள் வாயிலாக மக்கள் தங்கள் மனதில் பட்டதை தெரிவித்து வருகிறார்கள். இந்த கருத்துக்களை மீம்ஸ்கள் எளிதாக்குகின்றன.
தற்போது தமிழக மீனவர் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து மக்கள் தெரிவிக்கும் கருத்துக்களை பாருங்கள்.
|
பாட்டு பாடவா..
மீனவர் பிரச்சினைக்கு நாடாளுமன்றத்தில் அதிமுக குரல் எழுப்பும் என தம்பிதுரை கூறியுள்ள நிலையில், அந்த கட்சி எம்.பி எப்படி குரல் எழுப்பபோகிறார் என்பதை கேலி செய்கிறது இந்த மீம். நவநீத கிருஷ்ணன், காஷ்மீர்.. பியூட்டிபுல் காஷ்மீர் என பாடியவர் என்பதால் இவ்வாறு ஒரு டிவிட் வெளியாகியுள்ளது போலும்.
|
பசுமாடு
இனி தமிழக மீனவர்கள் படகில் ஒரு பசு மாட்டையும் அழைத்து செல்லவும்.. துப்பாக்கி சூட்டில் மாட்டுக்கு ஏதாவது ஆனா பிரச்சனை இந்திய அளவில் பரவும்.. என கூறுகிறது இந்த டிவிட்.
|
தமிழக மீனவர்கள் என்பதா
தேசிய மீடியாக்கள் என சொல்வோர், குஜராத் மீனவர்களை இந்திய மீனவர்கள் என்பதும், தமிழக மீனவர்களை, அவ்வாறு அழைக்காததும் வாடிக்கையாவிட்டது என்பதை இந்த டிவிட் சுட்டிக்காட்டுகிறது.
|
ராஜிவ் கொலைக்கும் மன்னிப்பு போதுமா
மீனவர் கொலைக்கு இலங்கை மன்னிப்பு கேட்க வேண்டும் என பொன்.ராதாகிருஷ்ணன் கூறிய நிலையில்,
ராஜீவ் கொலை வழக்கு கைதிகளை "சாரி" கேக்க சொல்றோம்.. வெளிய விடுறீங்களா?, என கேட்கிறது இந்த டிவிட்.