இப்ப புரியுதா நா ஏன் சாயங்காலமே லைட்ட அணைக்கட்டுமா லைட்ட அணைக்கட்டுமானு கேட்கிறேன்னு!
சென்னை: நகைச்சுவையான விசயம் என்றில்லை.. இப்போதெல்லாம் புண்பட்ட மனதைக்கூட மீம்ஸ் போட்டுத்தான் ஆற்றிக் கொள்கின்றனர் நெட்டிசன்கள். தற்போதும் அப்படித்தான் தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதைப் பற்றி நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த மாதம் முதல் தமிழகத்தில் புதிய மின்கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வாங்கும் சம்பளம் போதுமானதாக இல்லை என நடுத்தர வர்க்கத்தினரும், ஏழை மக்களும் புலம்பி வரும் நிலையில், மின்கட்டணம் இப்படி உயர்ந்துள்ளது நிச்சயம் அவர்களது பாக்கெட்டைப் பதம் பார்க்கும் என்பதில் சந்தேகமேயில்லை.
அதுவும் இப்போது ஏசி, பிரிட்ஜ், வாஷிங்மிஷின் இல்லாத வீடுகளை விரல் விட்டு எண்ணி விடலாம். மிக்ஸியில் இருந்து கிரைண்டர், வாட்டர்ஹீட்டர், செல்போன் சார்ஜ் என எல்லாவற்றிற்குமே மக்கள் மின்சாரத்தைத்தான் நம்பி இருக்கின்றனர். கட்டணம் உயர்ந்துவிட்டது என்பதால் எப்படியும் நம் மக்கள் மின்பயன்பாட்டைக் குறைக்கப் போவதில்லை. எனவே மின்கட்டணம் நிச்சயம் அதிகமாகத்தான் வரும் என்பதை எதிர்பார்த்து, இப்போதே மீம்ஸ் போட்டு தங்களை புதிய இயல்புநிலைக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கிவிட்டனர் போலும்.
அதனால்தான் சமூகவலைதளப் பக்கங்களில் மின்கட்டண உயர்வு பற்றிய மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன. இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...
















Click it and Unblock the Notifications