போனவருசம் அட்சய திரிதியைக்கு நகை வாங்கி கோடீஸ்வரர் ஆனவங்க.. ப்ளீஸ் மேடைக்கு வரவும்!
சென்னை : அட்சய திரிதியைக்கு நகை வாங்கினால், தங்கம் பன்மடங்கு பெருகும் என இன்று மக்கள் கூட்டம் நகைக்கடைகளில் அலைமோதிக் கொண்டிருக்க, வழக்கம் போல் நம் நெட்டிசன்கள் தங்கள் ஸ்டைலில் அதனைக் கலாய்த்து வருகின்றனர்.
நாளுக்கு நாள் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை அடைந்து வரும் நிலையில், அட்சய திரிதியைக்கு நகைதான் வாங்க வேண்டும் என்ற மக்களின் மனோபாவமும் மாறி வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். மக்கள் தங்களது பொருளாதார சக்திக்கு ஏற்ப ஒருபுறம் நகை வாங்கிக் கொண்டிருக்க, நகை வாங்கும் அளவிற்கெல்லாம் பணம் இல்லை என்பவர்கள் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி வருகின்றனர்.
சமீபகாலமாக அட்சய திரிதியைக்கு இதுபோன்ற வீட்டு உபயோகப் பொருட்களின் விற்பனை விளம்பரமும் அதிகமாக ஊடகங்களில் பகிரப்படுகிறது. தங்கம் வாங்கினால் மேலும் மேலும் தங்கம் சேரும் என்ற நம்பிக்கையைக்கூட ஏற்றுக் கொள்ளலாம்.. ஆனால் வீட்டிற்கு பிரிட்ஜ், வாஷிங்மெஷின், டிவி போன்ற பொருட்களை அட்சய திரிதியைக்கு வாங்கினால், அது மேலும் மேலும் வாங்கும் நிலை வருமா, எந்த லாஜிக்கில் அதை இப்படி விளம்பரப்படுத்தி விற்பனை செய்கிறார்கள் எனத் தெரியவில்லை.
எது எப்படியோ வழக்கம் போல் நம் நெட்டிசன்கள் இந்த அட்சய திரிதியையும் விட்டு வைக்கவில்லை. தங்கள் ஸ்டைலில், "நகை நட்டா.. நமக்கு இருக்க செலவுக்கு நகையெல்லாம் வாங்க முடியாது.. வேணும்னா நட்டு வாங்கித் தர்றேன்!" என்றும், "போனவருசம், அதுக்கு முந்தின வருசம், அதுக்கும் முந்தின வருசம்.. அட்சய திரிதியைக்கு நகை வாங்கி கோடீஸ்வரர் ஆனவங்க.. ப்ளீஸ் மேடைக்கு வரவும்!" என்றும் மீம்ஸ்களால் கலாய்த்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




















Click it and Unblock the Notifications